திக்விஜய் சிங் வாக்களிக்காதது காங்கிரஸ் கட்சியினரின் அகந்தையை காட்டுகிறது.. மோடி தாக்கு
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திக்விஜய் சிங் மக்களவை தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணித்தது, அக்கட்சியினரின் அகந்தையை வெளிக்காட்டுவதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் பிரக்யா சிங் தாகூர் போட்டியிட்டார்.

ராஜ்கர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற திக்விஜய் சிங்கிற்கு, அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தான் வாக்கு இருந்தது. ஆனால் தாம் இந்த முறை போட்டியிட்ட போபால் தொகுதியிலேயே அவர் நேற்று இருந்தார். இதனால் வாக்களிக்க தவறிவிட்டார்.
எதிர்கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு திக் விஜய் சிங்கின் வாக்கு புறக்கணிப்பு நிகழ்வு ஆளாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜனநாயக கடமையாற்ற நான் அகமதாபாத் வரை சென்று வாக்களித்தேன்.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை வரிசையில் நின்று செலுத்தினார்கள். ஆனால், திக்விஜய் சிங்கிற்கு ஜனநாயகத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை. எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். போபால் தொகுதியில் வெற்றி பெறுவதிலேயே குறியாய் இருந்துள்ளார்
தனது நலனை மட்டுமே எதிர்பார்த்து மக்கள் நலனை புறம் தள்ளியுள்ளார் திக்விஜய் சிங். தனது ஓட்டினை கூட போடாமல் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தவறான எடுத்துகாட்டாய் அமைந்துள்ளார் திக்விஜய் சிங் என கடுமையாக சாடியுள்ளார் பிரதமர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திக்விஜய் சிங் பாஜக சொல்வது போல் எனக்கு பயம் என்பது கிடையவே கிடையாது. தொகுதியில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலை போல் இதிலும் மக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என 100% நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
-
மோடியை மடக்கிய ஸ்டாலின்.. எங்களைக் காக்கப் பிரதமர் தயாரா? தேதி வாரியாக பட்டியல் போட்டு விளாசல்! -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
திமுகவை விட 2% வாக்கு அதிகம்.. 3ம் இடத்திற்கு செல்கிறது அதிமுக.. புதிய டேட்டாவுடன் வந்த ஆதவ் அர்ஜுனா -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம்












Click it and Unblock the Notifications