திக்விஜய் சிங் வாக்களிக்காதது காங்கிரஸ் கட்சியினரின் அகந்தையை காட்டுகிறது.. மோடி தாக்கு
டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மூத்த தலைவர் திக்விஜய் சிங் மக்களவை தேர்தலில் ஓட்டு போடாமல் புறக்கணித்தது, அக்கட்சியினரின் அகந்தையை வெளிக்காட்டுவதாக பிரதமர் மோடி கடுமையாக சாடியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரான திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாரதிய ஜனதா சார்பில் பிரக்யா சிங் தாகூர் போட்டியிட்டார்.

ராஜ்கர் தொகுதியில் ஏற்கனவே 2 முறை வெற்றி பெற்ற திக்விஜய் சிங்கிற்கு, அப்பகுதியில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தான் வாக்கு இருந்தது. ஆனால் தாம் இந்த முறை போட்டியிட்ட போபால் தொகுதியிலேயே அவர் நேற்று இருந்தார். இதனால் வாக்களிக்க தவறிவிட்டார்.
எதிர்கட்சியினரின் கடும் விமர்சனத்திற்கு திக் விஜய் சிங்கின் வாக்கு புறக்கணிப்பு நிகழ்வு ஆளாகியுள்ளது. இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரதமர் மோடி, ஜனநாயக கடமையாற்ற நான் அகமதாபாத் வரை சென்று வாக்களித்தேன்.
குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர் உள்ளிட்டோர் தங்களது வாக்கினை வரிசையில் நின்று செலுத்தினார்கள். ஆனால், திக்விஜய் சிங்கிற்கு ஜனநாயகத்தைப் பற்றியெல்லாம் கவலையில்லை. எப்போதும் தன்னைப் பற்றியே நினைத்துக் கொண்டிருக்கிறார். போபால் தொகுதியில் வெற்றி பெறுவதிலேயே குறியாய் இருந்துள்ளார்
தனது நலனை மட்டுமே எதிர்பார்த்து மக்கள் நலனை புறம் தள்ளியுள்ளார் திக்விஜய் சிங். தனது ஓட்டினை கூட போடாமல் முதல் தலைமுறை வாக்காளர்களுக்கு தவறான எடுத்துகாட்டாய் அமைந்துள்ளார் திக்விஜய் சிங் என கடுமையாக சாடியுள்ளார் பிரதமர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திக்விஜய் சிங் பாஜக சொல்வது போல் எனக்கு பயம் என்பது கிடையவே கிடையாது. தொகுதியில் மக்களின் வரவேற்பு சிறப்பாக உள்ளது. சட்டசபை தேர்தலை போல் இதிலும் மக்கள் என்னை தேர்வு செய்வார்கள் என 100% நம்பிக்கை உள்ளது என தெரிவித்துள்ளார்.
-
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி












Click it and Unblock the Notifications