மோடியின் வேலையே இதான்.. மக்களிடம் கொள்ளை! கூலிகள் தற்கொலை.. செல்வந்தர்களான நண்பர்கள் - ராகுல் சுளீர்
டெல்லி: சாதாரண மக்களிடம் கொள்ளையடித்து நண்பர்களை பணக்காரர்களாக்குவதே பிரதமர் நரேந்திர மோடியின் ஒரே வேலை என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் கவுதம் அதானி, கடந்த சில ஆண்டுகளாக இமாலய வளர்ச்சியை அடைந்து இருக்கிறார். துறைமுகம், விமான நிலையம், எரிசக்தி, தொலைதொடர்பு என பல துறைகளில் கால்பதித்து வருகிறது அதானி குழுமம்.
இப்படி தொடர்ந்து தொழில் வளர்ச்சியில் ஏற்றம்கண்டு வரும் அதானி, கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவின் கோடீஸ்வரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வந்த முகேஷ் அம்பானியை முறியடித்தார்.

உலக பணக்காரர்கள் பட்டியல்
இதனை தொடர்ந்து முன்னேறிய அதானி ஆசிய கோடீஸ்வரர்கள் பட்டியலிலும் முதலிடத்தை பிடித்தார். உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் இருந்த அதானி படிப்படியாக முன்னேறி கடந்த ஜூலை மாதம் உலக கோடீஸ்வரர்களின் பட்டியலில் பில்கேட்ஸை பின்னுக்கு தள்ளி 4 வது இடத்துக்கு முன்னேறினார்.

3 வது இடம்
இந்த நிலையில் அதானியின் சொத்து மதிப்பு 137.4 பில்லியன் டாலராக அதிகரித்து இருக்கிறது. இதன் மூலம் உலக கோடீஸ்வரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்து வந்த பெர்னார்ட் அர்னால்டை பின்னுக்கு தள்ளி கவுதம் அதானி மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். முதலிடத்தில் டெஸ்லா அதிபர் எலான் மஸ்கும், 2 வது இடத்தில் அமேசான் அதிபர் ஜெஃப் பெசோசும் உள்ளனர்.

ரெட் அலர்ட்
இந்த நிலையில் கடன் சுமை, கடன் நிலுவைத் தொகைகள், அரசு, சமூக ரீதியான காரணங்கள், அதானி குழுமத்தில் விரிவாக்க பணிகள் போன்றவற்றால் அந்த நிறுவனத்துக்கு அபாயம் ஏற்படலாம் என்று கடன் ஆராய்ச்சி நிறுவனம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்தது. அதானி குழுமம் தொழில்களுக்கு வங்கிகளிடம் அதிகளவில் கடன் வாங்கியே முதலீடு செய்வதாகவும் சிக்கல் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கணித்தது.

ராகுல் காந்தி டுவீட்
ஒரு மணி நேரத்திற்கு 5 தினக்கூலிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். பிரதமரின் மிகவும் பிரியமான நண்பர் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ₹85 கோடி சொத்து சேர்க்கிறார். பிரதமர் சாதாரண மக்களிடம் இருந்து கொள்ளை அடித்து தன் நண்பர்களை பணக்காரர் ஆக்கும் வேலையை மட்டும் தான் செய்கிறார்.












Click it and Unblock the Notifications