கூட்டணி கட்சிகளுக்கு பாஜக கொடுத்த தடபுடல் விருந்து.. மோடி மட்டும் அப்செட்
Recommended Video
டெல்லி: அனாவசியமாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது எதிர்க்கட்சிகள் சந்தேகம் கிளப்புகின்றன என்று, கூட்டணி கட்சிகளுடனான விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள், வியாழக்கிழமையான, நாளை வெளியாக உள்ள நிலையில், புதன்கிழமை இரவு டெல்லியில் உள்ள அசோகா நட்சத்திர ஹோட்டலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளின் தலைவர்களுக்கு பாஜக தலைவர் அமித் ஷா விருந்தளித்தார்.
இந்த விருந்து மாலை 7.15 மணிக்கு துவங்கி சுமார் 2 மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது.

கூட்டணி கட்சிகள்
இதில் பிரதமர் மோடி, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், லோக் ஜனசக்தி தலைவர் மற்றும் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான், சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மட்டுமின்றி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 39 கூட்டணிக் கட்சியினர் கலந்து கொண்டனர்.

டின்னர் நிகழ்ச்சி
எதிர்க்கட்சிகள் தேவையில்லாமல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது சந்தேகத்தை கிளப்பி சர்ச்சையை ஏற்படுத்தி வருவதாக கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் நரேந்திர மோடி ஆதங்கத்தை வெளிப்படுத்தியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மோடி ஆதங்கம்
தோல்வி உறுதியாகிவிட்டதை, எக்ஸிட் போல் மூலமாக அறிந்து கொண்டு வாக்குப்பதிவு எந்திரங்கள் மீது பழி சுமத்துவதற்கு தான் எதிர்க்கட்சிகள், திட்டமிட்டு காய் நகர்த்தி வருகின்றன என்று கூட்டணிக் கட்சித் தலைவர்களிடம் மோடி தனது அப்செட்டை வெளிப்படுத்தியதாக, செய்தி நிறுவனங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

எதிர்க்கட்சிகள்
வாக்கு எண்ணிக்கை மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் கடத்தப்பட்டதாக சில வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தேர்தல் ஆணையம் இதுபற்றி விசாரிக்க காங்கிரஸ் கோரிக்கைவிடுத்தது. தேர்தல் ஆணையம் மீது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஏற்கனவே கடும் குற்றச்சாட்டை முன் வைத்தார். எனவே விருந்து நிகழ்ச்சியில், பிரதமர் அப்செட்டாக இருந்ததாக கூறப்படுகிறது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications