இந்தியா- சீனா ராணுவ அதிகாரிகளிடையேயான பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு- இந்திய ராணுவம்
டெல்லி: இந்தியா, சீனா ராணுவ அதிகாரிகளிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு ஏற்பட்டுள்ளதாக ராணுவம் தெரிவித்துள்ளது.
Recommended Video
லடாக்கின் கால்வன் பள்ளத்தாக்கு மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனையடுத்து சீனாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டது.

இருநாடுகளிடையே பேச்சுவார்த்தை
இதனால் இந்தியா- சீனா இடையே யுத்தம் ஏற்படும் அபாயமும் உருவானது. இதனைத் தொடர்ந்து இருநாடுகளிடையே தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. சீனா- ரஷ்யா- இந்தியா வெளியுறவுத் துறை அமைச்சர்கள் நிலையிலான பேச்சுவார்த்தையும் வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் நடைபெறுகிறது.

எல்லையில் பேச்சுவார்த்தை
லடாக் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இந்திய- சீனா ராணுவ அதிகாரிகள் இடையே நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. சீனா பகுதியில் உள்ள மோல்டா பாயிண்ட்டில் இந்த பேச்சுவார்த்தை பல மணிநேரங்கள் நடைபெற்றது. திங்களிழமை நள்ளிரவு வரை பேச்சுவார்த்தை நீடித்தது.

சுமூகமான பேச்சுவார்த்தை
இப்பேச்சுவார்த்தை இன்றும் நடைபெறுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தை குறித்து ராணுவம் தெரிவிக்கையில், ஆக்கப்பூர்வமாகவும் சுமூகமாகவும் நடைபெற்றது. மோதல் நடைபெற்ற பகுதிகளில் இருந்து இருதரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள சுமூக உடன்பாடு எடப்பட்டிருக்கிறது என கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை பகுதிகளில் படைகள் விலக்கல்?
மேலும் இருதரப்பு இடையே பேச்சுவார்த்தையை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திச் செல்லவும் இணக்கம் காணப்பட்டிருக்கிறது. கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இருந்து ராணுவத்தை முழுமையாக விலக்குவது தொடர்பாக இருதரப்பும் விவாதிக்கிறது. அங்கு இந்தோ-திபெத் போலீசை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இன்று லடாக் பகுதியை பார்வையிட ராணுவ தளபதி நரவனே பயணம் மேற்கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
புலிப் பாய்ச்சல்.. உலக அரங்கில் தலைநிமிரும் இந்தியா! எதிர்பார்ப்புகளை கடந்த பிரம்மாண்ட GDP வளர்ச்சி! -
2047ல் இந்தியா வல்லரசு.. வாய்ப்பில்லை ராஜா! இன்னும் 34 வருஷமாகும்.. உண்மையை உடைத்த ஆய்வறிக்கை! -
மண்டை மேல உள்ள கொண்டையை மறந்த விஜய் அரசு.. கலைஞர் உரையுடன் மாணவர்களுக்கு வழங்கிய புத்தகப் பை -
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில்












Click it and Unblock the Notifications