பரவும் கொரோனா வைரஸ்.. எதிர்கொள்ள மத்திய அரசு முழு ஆயத்தம்.. ஹெல்ப்லைன் நம்பர் அறிவிப்பு!
டெல்லி: கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் இந்தியா வர உள்ள இந்தியர்களுக்கு சிகிச்சையளிக்க தனிமையிடங்கள் ஏற்படுத்தும் பணிகளில் இந்திய ராணுவத்தின் முப்படைகளும் ஈடுபட, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
Recommended Video
சீனாவின் வுஹான் நகரைச் சேர்ந்த இந்திய மாணவர்களை இந்திய விமானங்கள் மீட்டு தாயகம் அழைத்து வந்த வண்ணம் உள்ளன.
விமான நிலையத்தில் ஸ்க்ரீனிங் செய்யும் பணிகளில் ஆயுதப்படை மருத்துவ சேவைகள் (AFMS) மற்றும் விமான நிலைய சுகாதார ஆணையம் (APHO) ஆகியவற்றின் கூட்டுக் குழு ஈடுபட்டு வருகிறது.

முப்படைகள்
சீனாவின் வுஹானில் இருந்து வரவிருக்கும் சுமார் 300 இந்திய மாணவர்களின் தனிமைப்படுத்தலுக்காக இந்திய ராணுவம் ஹரியானாவின் மானேசர் அருகே ஒரு தனிமைப்படுத்தப்பட்ட இட வசதியை உருவாக்கியுள்ளது. இந்த இடத்தில், தகுதிவாய்ந்த மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் குழு மாணவர்களை பல வாரங்களுக்கு கண்காணிக்க முடியும்.

தனிமையிடங்கள்
இதேபோல சுமார் 2500 பேர் இந்தியா அழைத்து வரப்பட உள்ளனர். அவர்களுக்கு தேவையான தனிமையான இடங்களை அமைப்பது, அவர்களை அங்கே அழைத்துச் செல்வது உள்ளிட்ட பணிகளில் ஈடுபட வேண்டும் என்று, தரைப்படை, விமானப்படை, கடல்படை என்ற முப்படைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. ஏற்கனவே இந்தியாவிலும் பல்வேறு நகரங்களில் கொரோனா பாதிப்பு அறிகுறிகளுடன் பலருக்கும் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

சர்வதேச பயிற்சி
எனவே வரும் 18ம் தேதி விசாகபட்டிணத்தில் நடைபெற இருந்த சர்வதேச, கடற்படை பயிற்சியை ரத்து செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக, ஏ.என்.ஐ என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுபோன்ற பரபரப்பான சூழலில், சர்வதேச பயிற்சியை மேற்கொள்வது சரியாக இருக்காது என்பது மத்திய அரசின் கருத்தாக உள்ளதாம்.

ஹெல்ப் லைன்
அரசு இதுதொடர்பாக ஹெல்ப்லைன் எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் இந்தியா ஹெல்ப்லைன் எண்: + 91-11-23978046 கொரோனா வைரஸ் இந்தியா ஹெல்ப்லைன் மின்னஞ்சல்: [email protected]. இந்தியாவுக்கு வருபவர்களை சோதிப்பது முதல் உடனடி மருத்துவ சிகிச்சை அளிப்பது வரை வெவ்வேறு அமைச்சகங்களும், மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications