மோடி மயிலோடு பிஸி...உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் - ராகுல்காந்தி
பிரதமர் மோடி மயில்களோடு பிஸியாக இருப்பதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றுங்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா பரவுகிறது. மோடி மயில்களோடு பிஸியாக இருப்பதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று ராகுல்காந்தி கூறியுள்ளார். கொரோனா நோய்த்தொற்று இந்த வாரம் 50 லட்சத்தை எட்டும் பத்து லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் மோடி சில வாரங்களுக்கு முன்பு மயில்களுடன் இருப்பது போலவும் வாத்துக்களுடன் இருப்பது போலவும் எடுக்கப்பட்ட போட்டோக்கள் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டிருந்தன. இந்த படங்களை பாஜகவினர் தங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டிருந்தனர். இந்த பதிவிற்கு பலரும் எதிர்ப்பாகவும் பதிவிட்டனர்.

கொரோனா இந்தியாவில் நுழையத் தொடங்கியிருந்த மார்ச் மாதத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. பரிசோதனைகள் செய்யப்பட்டு சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன. தற்போது கொரோனா பரவியவர்களின் எண்ணிக்கை 48 லட்சத்தை கடந்து விட்டது. குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 38 லட்சமாக உள்ளது.
இந்த நிலையில் ராகுல்காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று ஒரு பதிவை போட்டிருக்கிறார். கொரோனா நோய்த்தொற்று இந்த வாரம் 50 லட்சத்தை எட்டும் 10 லட்சம் பேர் சிகிச்சையில் இருக்கிறார்கள். திட்டமிடப்படாத லாக்டவுன் என்பது ஒரு நபரின் ஈகோவின் விளைவுதான். இதனால்தான் கொரோனா நாடு முழுவதும் பரவுகிறது. பிரதமர் மோடி மயில்களோடு பிஸியாக இருப்பதால் உங்கள் உயிரை நீங்களே காப்பாற்றிக்கொள்ளுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications