நம்ம கெத்து.. 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்கிறது இந்தியா
டெல்லி: உலகம் முழுவதும் கொரோனா பாதித்த 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோர்குயின் மருந்தை இந்தியா ஏற்றுமதி செய்து வருகிறது.
Recommended Video
இந்தியாவின் மலேரியாவுக்கு எதிரான ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்துதான் இப்போது உலக நாடுகளுக்கான ஒரு வரப்பிரசாதம். உலக நாடுகளை பேரழிவுக்குள்ளாக்கி வருகிறது கொரோனா வைரஸ்.

இந்த கொரோனாவை கட்டுப்படுத்த ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தும் பயன்படுத்தப்படுகிறது. ஆகையால் இம்மருந்தை தங்களுக்கு ஏற்றுமதி செய்தாக வேண்டும் என்று அமெரிக்கா மிரட்டியது. இந்தியாவும் அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தது.
நாடு முழுவதும் இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. தற்போது மலேசியா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் இந்தியா ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை ஏற்றுமதி செய்து வருகிறது.
கொரோனா பாதிப்புகளின் தொடக்கத்தின் போது மருந்துகள் ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்து. சில நாட்களுக்கு முன்னர்தான் இந்த தடை நீக்கப்பட்டது. தற்போது உலகம் முழுவதும் 55 நாடுகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்து ஏற்றுமதியாகிறது.
ஆப்கானிஸ்தான், பூட்டான், வங்கதேசம், இலங்கை, நேபாளம், மாலத்தீவு, மொரீசியஸ், மியான்மர், ஜாம்பியா, டொமினிக் குடியரசு, மடகாஸ்கர், உகாண்டா, புர்கினா பாசோ, நைஜர், மாலி காங்கோ, எகிப்து, ஆர்மீனியா, கஜகஸ்தான், ஈக்குவடார், ஜமைக்கா, சிரியா, உக்ரைன், சாட், ஜிம்பாப்வே, பிரான்ஸ், ஜோர்டான், கென்யா, நெதர்லாந்து, நைஜீரியா, ஓமன், பெரு ஆகிய நாடுகளும் இந்தியாவிடம் இருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை பெறுகின்றன.
ஆனால் பாகிஸ்தான் இம்மருந்தை கேட்டிருக்கிறதா? என்பதற்கான தகவல்கள் எதுவும் இல்லை. பெரும்பாலான நாடுகளுக்கு வர்த்தக ரீதியில்தான் இம்மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. சில நாடுகளுக்கு உதவி என்ற அடிப்படையிலும் இம்மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications