இந்தியாவில் ஒருநாள் கொரோனா பாதிப்பு 43,071; 24 மணிநேரத்தில் 955 பேர் மரணம்
டெல்லி: நாட்டின் ஒருநாள் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 43,071 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் 955 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 18,42,43,392. மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 40 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதுவரை 39,87,407 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

பிரேசிலில் அதிக பாதிப்பு
தற்போதைய நிலையில் பிரேசிலில்தான் ஒருநாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. பிரேசிலில் நேற்று மட்டும் 54,556 பேருக்கு கொரோனா உறுதியானது.

இந்தியாவின் ஒருநாள் பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மொத்தம் 43,071 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 கோடியை தாண்டி உள்ளது. இந்தியாவில் 3,05,45,433 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது.

24 மணிநேரத்தில் 955 பேர் மரணம்
மேலும் நேற்று ஒருநாளில் 955 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர். நாட்டின் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 4,02,005 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 52,299 பேர் குணமடைந்தனர். நாட்டில் இதுவரை மொத்தம் 2,96,58,078 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.

கொரோனா தடுப்பூசி
இந்தியாவில் தற்போதைய நிலையில் 4,85,350 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்கள் எண்ணிக்கை 35 கோடியை தாண்டி உள்ளது. இதுவரை 35,12,21,306 பேர் கொரோனா தடுப்பூசிகள் போட்டுக் கொண்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications