கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை!
டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை என்பது 25.09% ஆக அதிகரித்துள்ளது கவலைக்குரியதாக உள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது.
கொரோனா லாக்டவுன் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது:
மே 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 24.3% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 8.8% ஆக இருந்தது.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 27% ஆக இருந்தது. இது கிராமப்புற வேலைவாய்ப்பின்மையை விட அதிகமானதாகும். அதாவது நகர்ப்புறங்களில் பணி செய்யக் கூடிய வயதினரில் 25%க்கும் குறைவானோர்தான் வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கின்றனர். அதேநேரத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை என்பது மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 22.79% ஆக இருந்தது. இது மே 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 25.09% ஆக அதிகரித்திருக்கிறது.

தொடரும் ஆட்குறைப்பு
லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட் குறைப்பு, ஊதியம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. ஸ்விக்கி, உபேர் போன்ற பல நிறுவனங்களைப் போல ரேமண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ஊதிய குறைப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தது. ஓலாவும் ஸ்விக்கியும் 1,000 மற்றும் 1,400 பணியாளர்களை நீக்கியுள்ளது. சுமோட்டா நிறுவனம் 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

கிராமங்களில் வேலைவாய்ப்பு
லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் 25% பேருக்கு வேலைவாய்ப்பின்மை என்பது 4ல் ஒரு கிராமப்புற ஊழியருக்கு வேலை என்பதாகும். நகர்ப்புறங்களில் பணிகளை இழந்தவர்கள், பணிகளை விட்டு விட்டு கிராமங்களுக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை கூடுதலாகும் போது நிலைமை மேலும் சிக்கலாகும்.
Recommended Video

சற்று குறைவு
இருப்பினும் பொதுவாக மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது 26.95% ஆக இருந்தது. இது தற்போது 22.72% ஆக குறைந்திருக்கிறது. இது தற்போதைய லாக்டவுன் காலத்தில் ஒருவகையில் ஆறுதலை தரக் கூடியதாகும்.
-
பெரிய சிக்கலில் இந்தியா! 1970ல் நடந்தது போல.. இப்போதும் நடக்கப்போகுது! வெளியான ஷாக் தகவல்! -
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
துரந்தர் இல்லை.. துரோகி.. இந்திய விமான படை வீரர் அதிரடி கைது! பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தது அம்பலம் -
ஹேப்பி நியூஸ்..சிலிண்டர் சிக்கல் இனி வராது! இந்தியாவுக்கு கைகொடுத்த ஈரான்! பாய்ந்து வரும் கப்பல்கள்! -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது?












Click it and Unblock the Notifications