கொரோனா லாக்டவுன்... கிராமப்புறங்களைவிட நகர்ப்புறங்களில் தலைவிரித்தாடும் வேலைவாய்ப்பின்மை கொடுமை!
டெல்லி: கொரோனா லாக்டவுன் காலத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை என்பது 25.09% ஆக அதிகரித்துள்ளது கவலைக்குரியதாக உள்ளது. அதேநேரத்தில் கிராமப்புறங்களை ஒப்பிடுகையில் நகர்ப்புறங்களில் வேலைவாய்ப்பின்மை அதிகமாக உள்ளது.
கொரோனா லாக்டவுன் மற்றும் வேலைவாய்ப்பின்மை குறித்து சி.எம்.ஐ.இ வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளதாவது:
மே 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பின்மை விகிதமானது 24.3% ஆக அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்தில் இது 8.8% ஆக இருந்தது.

நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை 27% ஆக இருந்தது. இது கிராமப்புற வேலைவாய்ப்பின்மையை விட அதிகமானதாகும். அதாவது நகர்ப்புறங்களில் பணி செய்யக் கூடிய வயதினரில் 25%க்கும் குறைவானோர்தான் வேலைவாய்ப்புகளை பெற்றிருக்கின்றனர். அதேநேரத்தில் கிராமப்புற வேலைவாய்ப்பின்மை என்பது மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 22.79% ஆக இருந்தது. இது மே 24-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் 25.09% ஆக அதிகரித்திருக்கிறது.

தொடரும் ஆட்குறைப்பு
லாக்டவுன் காலத்தில் நிறுவனங்கள் மேற்கொண்ட ஆட் குறைப்பு, ஊதியம் குறைப்பு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் வேலைவாய்ப்பின்மை அதிகரித்திருக்கிறது. ஸ்விக்கி, உபேர் போன்ற பல நிறுவனங்களைப் போல ரேமண்டும் நூற்றுக்கணக்கான பணியாளர்களை பணி நீக்கம் செய்தது. ஊதிய குறைப்பு நடவடிக்கையையும் மேற்கொண்டிருந்தது. ஓலாவும் ஸ்விக்கியும் 1,000 மற்றும் 1,400 பணியாளர்களை நீக்கியுள்ளது. சுமோட்டா நிறுவனம் 13% பணியாளர்களை பணிநீக்கம் செய்திருக்கிறது.

கிராமங்களில் வேலைவாய்ப்பு
லாக்டவுன் தளர்வுகளைத் தொடர்ந்து கிராமப்புறங்களில் இயல்பு நிலை திரும்பிக் கொண்டிருக்கிறது. ஆனாலும் கடந்த சில வாரங்களாக கிராமப்புற வேலைவாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. கிராமப்புறங்களில் 25% பேருக்கு வேலைவாய்ப்பின்மை என்பது 4ல் ஒரு கிராமப்புற ஊழியருக்கு வேலை என்பதாகும். நகர்ப்புறங்களில் பணிகளை இழந்தவர்கள், பணிகளை விட்டு விட்டு கிராமங்களுக்கு திரும்பியவர்கள் எண்ணிக்கை கூடுதலாகும் போது நிலைமை மேலும் சிக்கலாகும்.
Recommended Video

சற்று குறைவு
இருப்பினும் பொதுவாக மே 17-ந் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் வேலைவாய்ப்பின்மை என்பது 26.95% ஆக இருந்தது. இது தற்போது 22.72% ஆக குறைந்திருக்கிறது. இது தற்போதைய லாக்டவுன் காலத்தில் ஒருவகையில் ஆறுதலை தரக் கூடியதாகும்.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications