மாஸ்க் அணிவது கட்டாயம்.. எச்சில் துப்பினால் தண்டனை.. பல்வேறு புதிய விதிகளை அறிவித்த மத்திய அரசு!
வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
டெல்லி: வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும், பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை அளிக்கப்படும் என்று மத்திய அரசு பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.
Recommended Video
கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு மேலும் 2 வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில் மத்திய உள்துறை அமைச்சகம் இந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மே 17ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதனுடன் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதில் ஒன்றுதான் மாஸ்க் அணிவது தொடர்பான அறிவிப்பு ஆகும். அதன்படி மக்கள் எல்லோரும் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்.

மாஸ்க் அணிய வேண்டும்
அதேபோல் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் மாஸ்க் அணிவதை தங்கள் வளாகத்தில் கட்டாயமாக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களில் எச்சில் துப்பினால் கடும் தண்டனை அளிக்கப்படும். இதை மீறினால் அதற்கு உரிய அபராதம் மாநில அரசின் விதிகளின்படி விதிக்கப்படும். பொது இடங்களிலும், பேருந்து உள்ளிட்ட போக்குவரத்து தனி மனித இடைவெளியையே கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

மது, புகைபிடிக்க வேண்டும்
பொது இடங்களில் மது அருந்தவோ, புகை பிடிக்கவோ மற்ற புகையிலை பொருட்களை பயன்படுத்தவோ கூடாது. பொது இடங்களில் மக்கள் எங்கும் கூட்டமாக கூட கூடாது. அதே போல் அலுவலகங்களிலும் மக்கள் கூட்டமாக கூட கூடாது. ஐந்து பேருக்கும் அதிகமாக யாரும் எங்கும் கூட கூடாது. அலுவலகங்களில் தனிமனித இடைவெளியை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும்.

33% பணியாளர்கள்
அதேபோல் அலுவலகங்களில் 33% பணியாளர்கள் மட்டுமே ஒரே நேரத்தில் பணியாற்ற முடியும். இதை உறுதிப்படுத்தும் வகையில் சரியான ஷிப்ட் முறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலக நிர்வாகம் இதை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். உணவு இடைவேளையில் கூட ஷிப்ட் முறைகளை கடைபிடிக்க வேண்டும். அலுவலகங்களில் தெர்மல் ஸ்கெனிங் முறைகளை கட்டாயமாக்க வேண்டும்.

சானிடைச்சர்கள் கட்டாயம்
சானிடைச்சர்கள் கண்டிப்பாக இருக்க வேண்டும். பணியை தொடங்கும் முன் மொத்தமாக அலுவலகம் சுத்தம் செய்யப்பட வேண்டும். பெரும்பாலும் கூட்டங்களை ஆன்லைன் மூலம் நடத்த வேண்டும். போதுமான போக்குவரத்து வசதிகளை அலுவலகம் செய்து கொடுக்க வேண்டும், என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications