இந்தியாவில் 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா; மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,003
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இந்தியாவில் கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 78,003 ஆக உயர்ந்துள்ளதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
covid19india.org புள்ளிவிவரப்படி மகாராஷ்டிராவில் மிக அதிகமாக 25,922 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இங்கு நேற்று ஒரே நாளில் 1495 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. மகாராஷ்டிராவில் மட்டும் 975 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர்.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் மிக மோசமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. 9,268 பேர் கொரோனவால் பாதிக்கப்பட்டும் 566 பேர் உயிரிழந்தும் உள்ளனர். 3-வது இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மொத்தம் 9,227 ஆக அதிகரித்திருக்கிறது. ஆனால் கொரோனா மரணங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 64 பேர் இதுவரை கொரோனாவால் இறந்துள்ளனர்.
இந்த நிலையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 3,722 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு 78.003 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26,235 ஆகவும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2549 ஆகவும் உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது. கொரோனா பாதிப்பில் மகாராஷ்டிரா, குஜராத்தை தொடர்ந்து தமிழகம் 3-வது இடத்தில் இருந்து வருகிறது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications