அச்சுறுத்தும் கொரோனா.,. இதுவரை இந்தியாவில் ஒன்றுதான்.. இனி வரப்போகிறது 19.. மத்திய அரசு முடிவு
டெல்லி: கொரோனா வைரஸ் பரிசோதனை மையம் என்றால் நாட்டில் தற்போது புனேவில் மட்டும் தான் உள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் 19 இடங்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதை கட்டப்படுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.
இத்தாலியில் இருந்து ஜெய்ப்பூருக்கு சுற்றுலா வந்த 16 பேர் மற்றும் அவர்களுக்கு கார் ஓட்டிய இந்தியாவைச் சேர்ந்த டிரைவர் ஆகியோருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதேபோல் பெங்களூரு சாப்ட்வேர் என்ஜினியர், டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உள்பட மொத்தம் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.

பரிசோதிக்க உத்தரவு
நாடு முழுவதும் 12 நாடுகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமே விமான நிலையங்களில் சோதிக்கப்பட்டு வந்தனர். ஆனால் வெளிநாட்டு பயணிகளிடம் இருந்து தான் இந்தியாவிற்கு கொரோனா வைரஸ் பரவி இருக்கிறது. இதன் காரணமாக நாடு முழுவதும் உள்ள விமான நிலையங்களில் இனி அனைத்து நாடுகளைச் சேர்ந்த பயணிகளையும் பரிசோதித்த பின்னரே அனுமதிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

அவரச ஆலோசனை
இதனிடையே பிரதமர் மோடி தலைமையில் நேற்று அனைத்து அமைச்சக உயர் அதிகாரிகள் மட்டத்திலான அவசர கூட்டம் டெல்லியில் நடந்தது. இந்த கூட்டத்தில் மாநிலஅரசுகளுடன் இணைந்து மேற்கொள்ள வேண்டிய வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசித்தார். மேலும் வைரஸ் பரவுவதை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மருத்துவ ஏற்பாடுகள், வைரஸ் பரவுவதை தடுக் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

கொரோனா பரிசோதனை
பிரதமர் மோடி தலைமையில் நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களுக்கு மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய அரசு தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது. தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பை சோதனையிட புனேயில் மட்டுமே ஆய்வு மையம் உள்ளது. இதனால் 19 கொரோனா வைரஸ் சோதனை மையங்களை நாட்டில் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு நிலவரத்தை தினமும் பிரதமர் மோடி கவனித்து வருகிறார்" இவ்வாறு கூறினார்.

இந்தியாவில் ஒரே இடம்
புதிதாக கொரோனா வைரஸ் பரிசோதனை மையங்கள் அமைய உள்ள 19 இடங்கள் எவை எவை என்பது குறித்து மத்திய அரசு இன்னமும் அறிவிக்கவில்லை. தற்போதைய நிலையில் நாட்டில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் மட்டுமே பரிசோதனை மையம் உள்ளது. இங்கு மட்டுமே அனைத்து வகையான வைரஸ் நோய்களையும் கண்டுபிடிக்க கூடிய ஆராய்ச்சி மற்றும் பரிசோதனை கூடம் உள்ளது. இந்தியாவின் வேறு எந்த நகரிலும் கிடையாது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications