புதிய உச்சம்.. இந்தியாவில் 24 மணி நேரத்தில் 29108 கொரோனா கேஸ்கள்.. 500 பேர் பலி.. பரபரப்பு!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29108 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. இதனால் மொத்த பாதிப்பும் புதிய உச்சத்தை தொட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஐந்து முறை லாக்டவுன் போடப்பட்ட பின்பும் கூட தொடர்ந்து கேஸ்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் மொத்தமாக 879466 பேர் கொரோனா காரணமாக பாதிப்பு அடைந்துள்ளனர். இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29108 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது.

இந்தியாவில் கொரோனா காரணமாக இதுவரை 23187 பேர் பலியாகி உள்ளனர்.ஒரே நாளில் இந்தியாவில் 500 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.இந்தியாவில் 554429 பேர் இதுவரை டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு இருக்கிறார்கள். தற்போது இந்தியாவில் மொத்தம் 301850 ஆக்டிவ் கேஸ்கள் உள்ளது.
மகாராஷ்டிராவில் இதுவரை கொரோனா காரணமாக 254427 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்டிவ் நோயாளிகளாக 103516 பேர் இருக்கிறார்கள். 140325 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 10289 பேர் இதுவரை கொரோனா காரணமாக அங்கு பலியாகி உள்ளனர்.
தமிழ்நாட்டில் இதுவரை கொரோனா காரணமாக 1,38,470பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்டிவ் நோயாளிகளாக 46,972பேர் இருக்கிறார்கள். 89,532 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 1,966 பேர் இதுவரை கொரோனா காரணமாக அங்கு பலியாகி உள்ளனர்.
டெல்லியில் இதுவரை கொரோனா காரணமாக 1,12,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்டிவ் நோயாளிகளாக 19,155 பேர் இருக்கிறார்கள். 89,968 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 3,371 பேர் இதுவரை கொரோனா காரணமாக அங்கு பலியாகி உள்ளனர்.
குஜராத்தில் இதுவரை கொரோனா காரணமாக 41,906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்டிவ் நோயாளிகளாக 10,662 பேர் இருக்கிறார்கள். 29,198 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். 2,046 பேர் இதுவரை கொரோனா காரணமாக அங்கு பலியாகி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications