கொரோனா பாதிப்பு எதிரொலி.. நிலைமையை ஆய்வு செய்ய மோடி தலைமையில் மாலை அவசர அமைச்சரவை கூட்டம்
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதை அடுத்து இன்று மாலை பிரதமர் மோடி தலைமையில் அவசர அமைச்சரவை கூட்டம் கூடுகிறது.
Recommended Video
சீனாவையே ஒரு கலக்கு கலக்கி வந்த கொரோனா வைரஸ், தற்போது அங்கு தாக்கத்தை குறைத்து கொண்டு மற்ற நாடுகளில் வேலையை காட்டத் தொடங்கிவிட்டது.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 83 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இருவர் உயிரிழந்துவிட்டனர். இந்தியாவில் கேரளாவில் 19 பேரும், மகாராஷ்டிராவில் 14 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 11 பேரும், டெல்லியில் 7 பேரும், கர்நாடகாவில் 6 பேரும், லடாக்கில் 3 பேரும், ராஜஸ்தான், தெலுங்கானா, தமிழகம், ஜம்மு- காஷ்மீர், ஆந்திரா, பஞ்சாப் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் வெளிநாட்டினர் 17 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இந்தியாவில் பாதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் பெரிய பெரிய நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களை அலுவலகத்திற்கு வர வேண்டாம் என்றும் வீட்டிலிருந்த படியே பணியாற்றுங்கள் என்று கூறி கொரோனா பரவலை பல வகைகளில் தடுக்கும் நடவடிக்கைகள் நடந்து கொண்டுதான் வருகின்றன.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த நிலைமையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மாலை அவசரமாக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது. இதில் கொரோனாவை எதிர்கொள்ள தேவையான தயார் நிலை குறித்து ஆலோசிக்கப்படும். மேலும் அந்த நோய் பரவாததை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் ஆலோசனை நடத்தப்படும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications