காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி
டெல்லி: இந்தியா கூட்டணி தொடங்கி இப்போது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அனைவரும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதற்காகவே ஒன்று கூடினோம். ஆனால், கேரளா மாநிலத்தில் ஒரு தெளிவற்ற, குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. அங்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி போன்றவர்கள் எங்களுக்கு பா.ஜ.க.வுடன் ஏதோ ஒரு வகையான கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டும் அணுகுமுறையும் இப்படித்தான் இருக்கும் என்றால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதன் நோக்கம் தான் என்ன? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்,மாநிலங்களவை எம்பியுமான ஜான் பிரிட்டோ கூறுகையில், "காங்கிரஸ் கட்சியின் அணுகுமுறை, மனநிலை மற்றும் நடத்தை குறித்து எங்களுக்கு கடுமையான அதிருப்திகள் உள்ளன.
இந்தியா கூட்டணி தொடங்கி இப்போது மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டன. நாம் அனைவரும் பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதற்காகவே ஒன்று கூடினோம். ஆனால், கேரளா மாநிலத்தில் ஒரு தெளிவற்ற, குழப்பமான சூழல் உருவாகியுள்ளது. அங்கு ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி போன்றவர்கள் எங்களுக்கு பா.ஜ.க.வுடன் ஏதோ ஒரு வகையான கூட்டணி இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் குற்றச்சாட்டும் அணுகுமுறையும் இப்படித்தான் இருக்கும் என்றால், நாம் அனைவரும் ஒன்றாக அமர்ந்து பேசுவதன் நோக்கம் தான் என்ன? மேலும், பா.ஜ.க.வை எதிர்த்துப் போராடுவதில் எங்களுக்கிருக்கும் அர்ப்பணிப்பு மற்றும் உறுதியைப் பற்றி காங்கிரஸ் கட்சியிடமிருந்து நாங்கள் எந்தவொரு சான்றிதழையும் பெற விரும்பவில்லை.
ராகுல் காந்தியும் மல்லிகார்ஜுன கார்கேவும் எதிர்க்கட்சித் தலைவர்களாக இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் எங்களுடைய ஆதரவு இருப்பதால்தான் அவர்கள் தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர்களாக நீடிக்க முடிகிறது. காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறை குறித்து மிகவும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டும்" இவ்வாறு கூறியுள்ளார்.
கேரளாவில் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் தொடர்ந்து ஒரு குற்றச்சாட்டை வைக்து வந்தார்கள் "மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரையும் அமலாக்கத்துறை, சிபிஐ மூலம் சிறையில் தள்ளுகிறது. ஆனால், கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் மீது ஏகப்பட்ட புகார்கள் இருந்தும் மத்திய அரசு ஏன் நடவடிக்கை எடுப்பதில்லை? அப்படியென்றால் பா.ஜ.க-வோடு சிபிஎம் ஏதோ ஒரு ரகசிய உடன்பாட்டில் இருக்கிறதா?" என்பது காங்கிரஸின் வாதமாக இருந்தது. இது பெரிய அளவில் இடதுசாரிகளை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.
பா.ஜ.க-வின் கொள்கைகளைத் தீவிரமாக, தத்துவார்த்த ரீதியாக எதிர்க்கும் இடதுசாரிகளை'பா.ஜ.க-வின் பி-டீம்' (B-Team) என்று காங்கிரஸ் விமர்சிப்பதை அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. 'இந்தியா' கூட்டணியின் பிரதான நோக்கமே பா.ஜ.க-வை எதிர்ப்பதுதான் எனும் போது, தங்களுக்குள் இப்படி மாறி மாறிச் சேற்றை வாரி இறைத்துக் கொண்டால், அது ஒட்டுமொத்தக் கூட்டணியின் நம்பகத்தன்மையையும் தேசிய அளவில் பலவீனப்படுத்தும் என்பது கம்யூனிஸ்டுகளின் வாதமாக உள்ளது. ஏற்கனவே இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறிய திமுகவுமே காங்கிரஸின் நிலைப்பாடு பிடிக்காமல் வெளியேறியது. மற்ற கட்சிகளுமே கிட்டத்தட்ட காங்கிரஸ் கட்சியை கடுமையாக எதிரக்கிறார்கள். காங்கிரஸ் செய்யும் அரசியல் பாஜகவிற்கு சாதகமாக முடிகிறது என்பதே அவர்களின் வாதமாக உள்ளது. மம்தா பானர்ஜி கூட முன்பு காங்கிரஸ் கட்சியினை கடுமையான விமர்சித்து இருந்தார். பல மாநிலங்களில் மாநில கட்சிகள் காங்கிரஸ் கட்சி விமர்சித்து வருகின்றன. இதனால் இந்தியா கூட்டணியில் பரபரப்பு நிலவுகிறது.
-
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
சும்மா தூக்கிக் கொடுக்கல விஜய்.. காங்கிரஸுக்கு எதுக்கு எம்பி பதவி! தவெகவின் டெல்லி ‘மாஸ்டர்’ ப்ளான்! -
திருச்சி கிழக்கு விஜய் வென்ற தொகுதி.. அங்கு காங்கிரஸ் போட்டியிடாது.. ராஜேஷ் குமார் திட்டவட்டம்! -
ராஜ்யசபாவுக்கு செல்லும் ராகுலின் ‘டேட்டா கிங்’.. பிரவீன் சக்கரவர்த்தி போட்டியின்றி தேர்வு! -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
திமுக சொல்வது பொய்.. தலைமையிடம் சொல்லிவிட்டு தான் தவெகவுடன் சேர்ந்தோம் - உடைத்து பேசிய ப சிதம்பரம் -
தவெக - காங்கிரஸ் கூட்டணிக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.. முத்தரசன் சொன்ன வார்த்தை! -
வெளிநாட்டு சுற்றுப்பயணம்.. எந்த வீரருக்கும் இல்லாத ஸ்பெஷல் சலுகை! சூர்யவன்ஷிக்காக இறங்கி வரும் பிசிசிஐ -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
திருப்பரங்குன்றம் தீபம்.. தவெக அரசின் நிலைப்பாடு.. ஓபனாக பேசிய சிபிஎம்! முக்கிய டிமாண்ட்!














Click it and Unblock the Notifications