பப்ஜி மோகத்தில் சிக்கிய சிஆர்பிஎஃப் வீரர்கள்.. விளையாட அதிரடி தடை.. உயரதிகாரிகள் கண்காணிக்க உத்தரவு
டெல்லி: மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் பப்ஜி என்ற மிக பிரபலமான ஆன்லைன் விளையாட்டை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாக சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை அதிகம் அடிமையாகி விளையாட கூடிய ஆன்லைன் கேம் ஒன்று உண்டு என்றால் அது பப்ஜி தான். ஸ்மார்ட் போனை வைத்து சதா சர்வகாலமும் இதை விளையாடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. எனவே பப்ஜியை தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் அவ்வபோது நடு முழுவதும் எழுந்து வருகிறது

சமீபத்தில் நேபாளத்தில் பப்ஜி விளையாட தடை விதிக்கப்பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல பள்ளிகள், மற்றும் கல்லூரிகளில் இந்த விளையாட்டிற்கு தடை விதிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சிஆர்பிஎஃப் எனப்படும் மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களில் பப்ஜி கேமை விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் மீதான மோகம் காரணமாக தொடர்ந்து விளையாடியதால், ஏராளமான படை வீரர்களின் செயல்திறன் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடியதன் மூலம், சக வீரர்களுடன் பேசி மகிழ்வது குறைந்து எப்போதும் போனிலேயே அதிக நேரம் செலவிடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.
இந்த விளையாட்டை தொடர்ந்து விளையாடியதால் பல வீரர்கள் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, அவர்களின் உடல் மற்றும் மனநலன்கள் பாதிக்கப்படுவதாகவும் ராணுவ வட்டாரங்கள் விளக்கமளித்துள்ளன.
மேலும் வீரர்கள் பப்ஜி விளையாடுவதைத் தடுக்க அவர்களை உயர் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. வீரர்கள் தங்களது ஸ்மார்ட் போன்களிலிருந்து பப்ஜியை நீக்கிவிட்டார்களா என்பதை உறுதிபடுத்த வேண்டும் எனவும் உயரதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பப்ஜி விளையாட கூடாது என்ற உத்தரவை மீறும் வீரர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
-
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
தெற்கு ரயில்வேயில் 827 கி. மீ தூரத்திற்கு நடந்த நல்ல விஷயம்.. பயணிகள், பொதுமக்களுக்கு இனி நிம்மதி -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை












Click it and Unblock the Notifications