தாவூத் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள்... சிக்கும் சென்னை வங்கி
டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் கூட்டாளி இக்பால் மிர்சியின் பண பரிவர்த்தனைகள் சென்னையை சேர்ந்த வங்கி ஒன்றின் மூலமாக நடைபெற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. தற்போது அந்த சென்னை வங்கி விசாரணை வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
இக்பால் மிர்சியின் ரூ2,100 கோடி பணம் சட்டவிரோதமாக துபாய் கணக்குகளுக்கு மாற்றப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த விசாரணையின் ஒருபகுதியாக அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் இக்பால் மர்சி தொடர்புடைய நிறுவனங்களில் சனிக்கிழமையண்று சோதனை நடத்தினர். மும்பை உள்ளிட்ட பல இடங்களில் இச்சோதனை நடத்தப்பட்டது.
தற்போது சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்த தொழிலதிபர் ஒருவரும் மிர்சி விவகாரத்தில் சிக்கி இருக்கிறார். அவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள வங்கி ஒன்றில் போலி கணக்குகளை தொடங்கி மிர்சியின் பணத்தை துபாய்க்கு அவர் மாற்ற உதவியதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த வங்கியும் விசாரணை வளையத்தில் சிக்கி இருக்கிறது.
ஏற்கனவே தேசியவாத காங்கிரஸ் தலைவர் பிரபுல் பட்டேலுக்கும் மிர்சி குடும்பத்துக்குமான வர்த்தக தொடர்புகள் குறித்து அமலாக்கப் பிரிவுகள் விசாரணை நடத்தி வருகின்றனர். தாவூத்தின் கூட்டாளியான மிர்சி 2013-ம் ஆண்டு லண்டனில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications