காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது.. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது?
டெல்லி: தீபாவளி பண்டிகையையொட்டி மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு எப்போது தெரியுமா?
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி, அக நிவாரணப்படி, வீட்டு வாடகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன. இந்த நிலையில் பண்டிகை காலம் நெருங்குவதால் மத்திய அரசின் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு எப்போது வரும் என பலர் காத்திருக்கிறார்கள்.

மத்திய அரசு எப்போது வேண்டுமானாலும் அகவிலைப்படியை அறிவிக்க வாய்ப்புள்ளது. இந்த நிலையில் நவராத்திரிக்கு பிறகு அகவிலைப்படி உயரும் அறிவிப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
இந்த முறை அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாம். இதனால் தற்போது 42 சதவீதமாக இருக்கும் அகவிலைப்படி 45 சதவீதமாக உயரும் என தெரிகிறது. அகவிலைப்படி 3 சதவீதம் உயர்த்தினால் மத்திய அரசு ஊழியர்களின் ஊதியம் உயரும். ஒரு ஊழியரின் வருமானம் மாதத்திற்கு ரூ 50 ஆயிரம், அடிப்படை ஊதியம் ரூ 15 ஆயிரமாக இருந்தால் அவர் தற்போது 6300 ரூபாய் அகவிலைப்படியாக பெறுகிறார்.
இதே அகவிலைப்படி உயர்ந்தால் கூடுதலாக ரூ 450 அதிகரித்து ரூ 6,750 ஊதியம் அதிகரிக்கும். அகவிலைப்படி பணியாற்றும் ஊழியர்களுக்கு மட்டுமல்லாமல் ஓய்வூதியம் பெறுவோருக்கும் உயர்த்தப்படுகிறது. பொதுவாக ஜனவரி, ஜூலை மாதம் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்துகிறது.
அந்த வகையில் ஜூலை மாதம் 4 சதவீதம் அகவிலைப்படி உயர்ந்ததால் 42 சதவீதமாக இருந்தது. தற்போது மேலும் 3 சதவீதம் அகவிலைப்படி உயரும் என சொல்லப்பட்டுள்ளது. 2006 ஆம் ஆண்டு மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களுக்கான டிஏ மற்றும் டிஆர் கணக்கீட்டுக்கான ஃபார்முலாவை மத்திய அரசு மாற்றியமைத்தது.
அதன்படி அகவிலைப்படி சதவீதம் = ((AICPI இன் சராசரி (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 12 மாதங்களுக்கு -115.76)/115.76)x100. மத்திய பொதுத்துறை ஊழியர்களுக்கு: அகவிலைப்படி சதவீதம் = ((அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீட்டின் சராசரி (AICPI) (அடிப்படை ஆண்டு 2001=100) கடந்த 3 மாதங்களுக்கு -126.33)/126.33)x100.
இந்த அகவிலைப்படி உயர்வானது நவராத்திரிக்கும் தீபாவளிக்கும் இடையே அறிவிக்கலாம் என தெரிகிறது. அவ்வாறு அறிவிக்கப்பட்டவுடன் ஜூலை 1, 2023 முதல் அமலுக்கு வரும் என கருதப்படுகிறது.
-
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: 5 சவரன் தங்கம் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்! எப்படி விண்ணப்பது -
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம்.. எழுதிக் கொடுத்த மாவட்டச் செயலாளர்கள்.. நாளை விஜய் எடுக்கும் முடிவு? -
அமெரிக்கா போட்ட தப்பு கணக்கு... ஈரான் விரித்த 'மொசைக்' வலை.. யார் இந்த முகமது அலி ஜாஃபரி? -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
தங்கம் vs ரியல் எஸ்டேட்.. கடைசி காலத்தில் நிம்மதியாக வாழ எது சிறந்தது? ஆனந்த் சீனிவாசன் ஈஸி விளக்கம் -
160+ சீட்டில் எடப்பாடி பழனிசாமி யூடர்ன்.. சீனியர் லிஸ்ட்டை கிழித்து.. உளவுத்துறை மாஜி சொன்ன சீக்ரெட் -
விரால் மீனின் ஸ்பெஷாலிட்டி இது.. பாம்பு தலையன் மீனுக்குள் அற்புதமான சீக்ரெட்! பெண்களின் வரப்பிரசாதம் -
முகத்திற்கு நேராக மம்தா சொன்ன வார்த்தை! ஆளுநர் ரவியின் சிரிப்பு அப்படியே போச்சு! முதல் நாளே சம்பவம் -
ஜான் ஆரோக்கியசாமி போட்ட மெகா ஸ்கெட்ச்.. மிரண்டு போன பாஜக மேலிடம்.. B டீம் முத்திரையை உடைப்பாரா விஜய் -
திரிஷா சர்ச்சை அடங்குவதற்குள் மீண்டும் பரபரப்பு… காதல், கள்ளக்காதல் பற்றி பார்த்திபன் ஓபனாக பேச்சு -
திமுக மாணவரணி செயலாளராக முதல்முறையாக பெண் நிர்வாகி நியமனம்.. ராஜீவ் காந்தி திடீர் மாற்றம்












Click it and Unblock the Notifications