தூக்கிலிடுவதற்கு பதில் வலி இல்லாத மரண தண்டனை குறித்து ஆராய வல்லுநர் குழு: மத்திய அரசு
டெல்லி: நாட்டில் தூக்கிலிட்டு மரண தண்டனையை நிறைவேற்றும் முறைக்கு பதிலாக வலி இல்லாத மரண தண்டனையை அமல்படுத்துவது தொடர்பாக ஆராய வல்லுநர் குழு அமைப்பது குறித்து பரிசீலித்து வருவதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அரிதினும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை வழங்கப்படுகின்றன. தூக்கிலிட்டுதான் இத்தகைய மரண தண்டனைகள் நாட்டில் நிறைவேற்றப்படுகின்றன. இத்தகைய மரண தண்டனை நடைமுறைகளுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்தது. அப்போது, இந்தியாவின் மரண தண்டனை முறை மிக கொடூரமானதாக சட்ட ஆணையம் சுட்டிக்காட்டி இருக்கிறது என்றார் மூத்த வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா. இது தொடர்பான வாதங்களையும் அவர் முன்வைத்திருந்தார்.
இவ்வழக்கில் கருத்து தெரிவித்த தலைமை நீதிபதி சந்திரசூட், நமது நாட்டில் நிறைவேற்றப்படுகிற மரண தண்டனை முறையானது கொடூரமானதுதானா? என்பது குறித்து மத்திய அரசு விவாதிக்க முன்வர வேண்டும் என்றார். அத்துடன் மரண தண்டனையை தூக்கிலிடுதல் போல் அல்லாமல் குறைவான வலியுடன் நிறைவேற்ற மாற்று வழிகள் இருக்கின்றனவா? என்பது குறித்தும் ஆராயலாம் எனவும் மத்திய அரசுக்கு தலைமை நீதிபதி சந்திரசூட் அறிவுறுத்தி இருந்தார். இதனை ஆய்வு செய்து அறிக்கையாகத் தாக்கல் செய்ய அட்டர்னி ஜெனரல் வெங்கட்ரமணிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அத்துடன் இது தொடர்பாக ஒரு குழுவை அமைத்தும் மத்திய அரசு ஆலோசனை நடத்தலாம் எனவும் உச்சநீதிமன்றம் வழிகாட்டி இருந்தது.
இந்நிலையில் இன்று இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, தூக்கிலிட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு பதிலாக மாற்று வழி குறித்து ஆராய வல்லுநர் குழுவை அமைப்பது தொடர்பாக மத்திய அரசு பரிசீலித்து வருகிறது மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
-
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி?












Click it and Unblock the Notifications