அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்ட 75வது ஆண்டு! நாடாளுமன்றத்தில் இன்று விவாதம்
டெல்லி: இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, இன்றும் நாளையும் நாடாளுமன்றத்தில் அரசியலமைப்பு சட்டத்தின் மீது விவாதம் நடைபெறுகிறது. விவாதத்தின் இறுதியில் பிரதமர் நரேந்திர மோடி பதிலளிக்கிறார்.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா இன்று உருவெடுத்திருப்பதற்கு முக்கிய காரணம், நாட்டின் அரசியலமைப்பு சட்டம்தான். இந்த சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆகியுள்ளன. இந்நிலையில், அரசியலமைப்பு மீதான விவாதத்தை மக்களவையில் பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைக்கிறார். இன்றும் நாளையும் விவாதம் நடைபெறுகிறது. மாநிலங்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இந்த விவாதத்தை தொடங்கி வைக்கிறார்.

ஏற்கெனவே அதானி விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன. ஆனால் இந்த கோரிக்கை இரண்டு அவைகளிலும் ஏற்கப்படாததால் நாடாளுமன்றம் தொடர்ந்து முடங்கி வருகிறது. மத்திய அரசு இந்த விவாதத்தை நடத்த தயாராக இல்லை. எதிர்க்கட்சிகளும் இதனை விட்டுக்கொடுக்க ரெடியாக இல்லை. எனவே இரு அவைகளின் செயல்பாடுகளும் முன்னெப்போதும் இல்லாத வகையில் தடைபட்டிருக்கிறது.
இந்த சூழலில்தான் அரசியலமைப்பு குறித்த விவாதம் தொடங்குகிறது. எதிர்க்கட்சிகள் சார்பில் இந்த விவாதத்தை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தொடங்கி வைப்பார் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மக்களவையில் விவாதம் முடிந்த பிறகு, மாநிலங்களவையில் வரும் டிச.16ம் அமித்ஷாவால் விவாதம் தொடங்கி வைக்கப்படும். எதிர்க்கட்சிகள் தரப்பில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விவாதங்களை தொடங்குவார்.
இரு அவையிலும் விவாதங்கள் நிறைவுற்ற பின்னர் பிரதமர் நரேந்திர மோடி இதன் மீது பதில் அளித்து பேசுவார். கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரங்களில் ராகுல் காந்தி அரசியலமைப்பை காப்பாற்ற வேண்டும் என்கிற முழக்கத்துடன் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இந்த பரப்புரை எதிர்பார்த்த அளவுக்கு கை கொடுத்திருந்தது. எனவே அனைத்து அரசியல் இயக்கங்களிலும் அரசியலமைப்பு புத்தகத்தின் பிரதியை ராகுல் காந்தி கையில் வைத்து சிறப்புரை ஆற்றி வருகிறார்.
இந்நிலையில் இந்த விவாதத்தில் எதிர்க்கட்சிகள் தீவிரமான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது. அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள உரிமைகளை பாதுகாக்க கோரி எதிர்க்கட்சி எம்பிக்கள் முழக்கம் எழுப்பலாம்.
-
நள்ளிரவில் அமெரிக்கா எடுத்த முக்கியமான முடிவு.. மொத்தமாக சரிந்த தங்கம்.. இனிமேல் இப்படி தான்? -
கரூர் கூட்ட நெரிசலில் எடுக்கப்பட்டதாக சொல்லப்படும் டிரோன் காட்சி முதல்முறையாக வெளியீடு! -
பாகிஸ்தானை விட மோசமான நிலையில் இந்தியா.. உலகின் மகிழ்ச்சியான நாடுகள் ரிப்போர்ட்டில் செம பெரிய ஷாக்! -
170ல் அதிமுக.. பாஜக, பாமக, அமமுக உட்பட கூட்டணி கட்சிக்கு 64 தொகுதிகள்.. எடப்பாடி போட்டுள்ள கணக்கு! -
ஒரு தொகுதிக்குள் சுருங்கிய ஓட்டக்கார தேவர் மகன்.. தனி மரமான ஓ.பன்னீர்செல்வம்! டெபாசிட்டாவது தேறுமா? -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
குடிப்பழக்கத்தை நிறுத்திவிட்டேன்.. பாட்டிலை தொட்டு 6 மாதமாகிவிட்டது.. ஜாலியாக சொன்ன சாஹல்! -
மிஷன் இம்பாசிபிள்.. $400 பில்லியன் 'சூப்பர்மேன்' விமானத்தை வீழ்த்திய.. ஈரானின் சின்ன ஹீட் சென்சார் -
சிறகடிக்க ஆசை: விஜயாவை அசிங்கப்படுத்திய வக்கீல்.. மீனா அருமை இப்போதாவது புரிந்ததே..! முத்து போட்ட அடி -
திண்டுக்கல் கொடை ரோடு விஏஓ சத்யா கனவிலும் நினைக்காதது.. அரசு ஊழியர்கள் அறிய வேண்டிய பாடம் -
மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 50% தாண்டினால் என்ன நடக்கும்? வீட்டு வாடகைப்படியிலும் மாற்றம்? -
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம்












Click it and Unblock the Notifications