டிசம்பர் 11ம் தேதியும், ராகுல் காந்தியும்.. 2வது முறையாக வீசிய அதிர்ஷ்டக் காற்று!
Recommended Video

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு டிசம்பர் 11-ஆம் தேதி மிகவும் ராசியான நாள் என்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆகியுள்ளது.
ராஜஸ்தான், மிஸோரம், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்களின் சட்டசபை தேர்தல் நடந்து முடிந்தது. அதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடக்கிறது.
இந்த வாக்கு எண்ணிக்கை முடிவதற்கு தாமதமாகும் என்கிற போதிலும் ஓரளவுக்கு எந்த கட்சி ஆட்சியை பிடிக்கும் என்பது நமக்கு தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அந்த வகையில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்று்ம சத்தீஸ்கர் ஆகிய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடிக்கவுள்ளது.

டிசம்பர் 11
தொடர் இழுபறிக்கு மத்தியில் இத்தகைய வெற்றி உறுதியாகிவிட்டது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் படுகுஷியில் உள்ளனர். இதில் இன்னொரு சந்தோஷமும் அவர்களுக்கு அடங்கியுள்ளது. அதாவது காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நாள் கடந்த ஆண்டு டிசம்பர் 11.

அதிர்ஷ்டம்
அது போல் இந்த ஆண்டு 5 மாநிலகளின் தேர்தல் முடிவுகள் டிசம்பர் 11-ஆம் தேதி வெளியாகி வருகிறது. அதில் 3 மாநிலங்களில் பாஜகவை காங்கிரஸ் கட்சி தோற்கடித்துவிட்டது. இதன் மூலம் ராகுலுக்கு டிசம்பர் 11-ஆம் தேதி மீண்டும் அதிர்ஷ்டமான நாள் என்பது தெரிகிறது.

கண்ணை குத்தி விட்டார்
அவர் அப்பதவியை ஏற்றுக் கொண்டது டிசம்பர் 16-ஆம் தேதியாகும். அவ்வாறு பொறுப்பேற்றவுடன் ராகுலின் முழு டார்கெட் பிரதமர் நரேந்திர மோடிதான். உண்மையில் சொல்ல போனால் பாஜகவை ராகுல் காந்தி அவர்களது விரலை கொண்டே கண்ணை குத்திவிட்டார்.

வட்டாரங்கள்
அதாவது காங்கிரஸ் மீது பாஜக கூறிய ஊழல் புகார்களை வைத்தே காங்கிரஸ் தலைவர்கள் வியூகம் வகித்து அக்கட்சியை தோற்கடித்தனர். இந்த வியூகத்தை காங்கிரஸ் கட்சி அடுத்த ஆண்டு லோக்சபா தேர்தல் வரை தொடரும் என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி பொறுப்பேற்று ஓராண்டு நிறைவடைந்த நிலையில் ராகுலுக்கு 3 மாநில தேர்தல் வெற்றியை மக்கள் பரிசளித்துள்ளதை விட வேறு சிறந்த பரிசு என்னவாக இருக்க முடியும்?5 என்கின்றனர் காங்கிரஸ் வட்டாரங்கள்.












Click it and Unblock the Notifications