டெல்லி: நாங்க எக்ஸாக்ட் போல் ரிசல்ட்டுக்கு வெயிட்டிங்... பாஜக ஆட்சி அமைக்கும்.. பிரகாஷ் ஜவடேகர்
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகளுக்காக நாங்கள் காத்திருக்கிறோம்; டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
டெல்லியில் 70 சட்டசபை தொகுதிகளுக்கு நேற்று ஒரே கட்டமாக வாக்குப் பதிவு நடைபெற்றது. வாக்குப் பதிவு முடிவடைந்த உடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டன.

அனைத்து எக்ஸிட் போல் முடிவுகளிலும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சிதான் மீண்டும் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. கடந்த 2015 தேர்தலை ஒப்பிடுகையில் பாஜகவுக்கு சில இடங்கள் கூடுதலாக கிடைக்கும் என்றும் காங்கிரஸுக்கு மிக அதிகபட்சமாக 4 இடங்கள்தான் கிடைக்க வாய்ப்பு என்றும் இந்த எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவித்திருக்கின்றன. இது நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில் டெல்லியின் 7 எம்.பிக்களையும் அழைத்து நேற்று இரவு பாஜக தலைவர் நட்டா ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் டெல்லி பாஜக மூத்த தலைவர்களும் பங்கேற்றனர். மத்திய அமைச்சர்கள் பிரகாஷ் ஜவடேகர், ஹர்தீப் சிங் பூரி, நித்தியானந்தா ராய், பாஜக அமைப்பு செயலாளர் சந்தோஷ், டெல்லி பாஜக தலைவர் மனோஜ் திவாரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறுகையில், எக்ஸிட் போல் முடிவுகளுக்கும் இறுதி தேர்தல் முடிவுகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு. நாங்கள் இறுதி தேர்தல் முடிவுகளுக்காக காத்திருக்கிறோம். கடந்த ஆண்டு லோக்சபா தேர்தலின் போது எக்ஸிட் போல் முடிவுகள் தவறானவை என்பது நிரூபிக்கப்பட்டன.
எங்களுக்கு களநிலவரம் என்ன என்பது தெரியும். பாஜகவுக்கு மக்களிடம் நல்ல ஆதரவு இருக்கிறது. பிப்ரவரி 11-ந் தேதி டெல்லியில் பாஜக ஆட்சி அமையும் என்றார்.
டெல்லி பாஜக மேலிட பொறுப்பாளர் ஷ்யாம் ஜாஜூ கூறுகையில், கடந்த காலங்களில் எக்ஸிட் போல் முடிவுகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டிருக்கின்றன. டெல்லி தேர்தலிலும் இறுதி முடிவுகள் ஒவ்வொருவருக்கும் ஆச்சரியத்தை தரும் வகையில் இருக்கும் என்றார்.
பாஜக மூத்த தலைவர் மீனாக்ஷி லெவி கூறுகையில், அரவிந்த் கெஜ்ரிவால் சொந்த தொகுதியில் கூட வெல்ல முடியாது. எக்ஸிட் போல் முடிவுகள் என்பது ஒரு சட்டசபை தொகுதிக்கு 2 வாக்குச் சாவடிகளில் கருத்து கேட்டு முடிவுகளாக அறிவிக்கப்படுகின்றன. மொத்தம் உள்ள 13,000 வாக்குச் சாவடிகளில் 0.12% பேரிடம் கருத்து கேட்கப்பட்டு எடுக்கப்பட்டிருக்கின்றன என கூறியுள்ளார்.
-
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன்












Click it and Unblock the Notifications