தீவிரமாகும் விவசாயிகள் போராட்டம்.. டெல்லியின் முக்கிய எல்லைப்புற சாலைகள் மூடல்
டெல்லி: விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி போராடி வரும் விவசாயிகளால் டெல்லியின் சிங்கு மற்றும் திக்ரி எல்லை சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன.
மத்திய அரசு கொண்டுவந்த 3 விவசாய சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் 150 நாட்களை எட்டப்போகிறது. டெல்லி எல்லைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருவதால், அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

உத்தரபிரதேசத்தை டெல்லியுடன் இணைக்கும் காசிப்பூர் எல்லை ஓரளவு திறக்கப்பட்டு, டெல்லியில் இருந்து காஜியாபாத் வரையிலான வாகன போக்குவரத்து நடந்து வருகிறது.
இதுகுறித்து போக்குவரத்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது: காஜியாபாத் நோக்கி காசிப்பூர் என்.எச் -24 மேல் பக்கம் போக்குவரத்து இயக்கத்திற்கு திறக்கப்பட்டுள்ளது. நொய்டாவிற்கும் டெல்லிக்கும் இடையிலான சில்லா எல்லை இருபுறமும் திறந்திருக்கும். என்றார்.
காஜியாபாத்தில் இருந்து டெல்லிக்குள் நுழையும் வாகனங்கள் ஆனந்த் விஹார், சூர் நகர், அப்சரா, போப்ரா, லோனி, கோண்ட்லி, சில்லா, புதிய அசோக் நகர், டி.என்.டி, மற்றும் கலிண்டி குஞ்ச் வழியாக செல்லும் மாற்று வழித்தடங்களுக்கு திருப்பி விடப்படுவதாக டெல்லி போக்குவரத்து போலீஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
எனவே இந்த வழிகளில் போக்குவரத்து நெரிசல் உள்ளது. காசிப்பூர் எல்லையைத் தவிர, சிங்கு, மற்றும் திக்ரி எல்லைகளும் மூடப்பட்டுள்ளன.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications