ஊருக்கு ஒரு காலு.. ஏரியாவுக்கு ஒரு கட்சி.. டெல்லியில் ஆம் ஆத்மிக்காக களமிறங்கும் பிரசாந்த் கிஷோர்!
டெல்லி: டெல்லியில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள ஆம் ஆத்மிக்கு பிரசாந்த் கிஷோர் வியூகம் வகுக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
டெல்லியில் தற்போதைய சட்டசபையின் பதவிக்காலம் வரும் 2020-ஆம் ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. மொத்தமுள்ள 70 சட்டசபை தொகுதிகளுக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது.
கடந்த 2015-ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெற்றி பெற்று தற்போது முதல்வராக இருக்கிறார்.

பாஜக வெற்றி
இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலில் ஆட்சியை தக்க வைத்துக் கொள்ள அரவிந்த் கேஜரிவால் விரும்புகிறார். ஏற்கெனவே டெல்லியில் லோக்சபா தேர்தலில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜகவே வென்றுள்ளது.

ஒப்பந்தம்
இதனால் பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் நிச்சயம் போட்டியிடும். எனவே கடும் போட்டியை சமாளித்து தற்போதைய ஆட்சியை அடுத்த தேர்தலிலும் தக்க வைத்துக் கொள்ள அரசியல் வியூகம் வகுக்கும் பிரசாந்த் கிஷோரை நாடியுள்ளார். இதற்காக அவர்களுக்கிடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
|
எல்லா கட்சிகளும்
இதை அரவிந்த் கேஜரிவாலே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்தியாவைச் சேர்ந்த ஐபேக் நிறுவனம் எங்களுடன் பணியாற்றவுள்ளதை மகிழ்ச்சியாக அறிவிக்கிறேன் என தெரிவித்துள்ளார். பிரசாந்த் கிஷோரை தமிழகம், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள கட்சிகளும் அணுகியுள்ளன.

பீகார் முதல்வர்
இவர் வகுத்து கொடுத்த வியூகத்தால் பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-இல் பிரதமராக வெற்றி பெற்றார். அது போல் ஆந்திரத்தில் பாரம்பரிய கட்சிகளை ஓரங்கட்டிவிட்டு ஜெகன்மோகன் ரெட்டியை முதல்வராக்கினார். மேலும் நிதிஷ்குமார் பீகார் முதல்வராக வெற்றி பெறுவதற்கும் இவர்தான் வியூகம் வகுத்தார். குடியுரிமை சட்டத்துக்கு எதிராக பீகாரின் ஐக்கிய ஜனதா தளத்தின் தேசிய துணை தலைவரும் ஐபேக் நிறுவனத்தின் உரிமையாளருமான பிரசாந்த் கிஷோர் குரல் கொடுத்தது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications