கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணை.. பரிந்துரை செய்த டெல்லி ஆளுநர்.. நாட்டிலேயே முதல் முறை!
டெல்லி: டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ விசாரணைக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே. சக்ஸேனா பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் மீது என்.ஐ.ஏ எனப்படும் தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் சக்ஸேனா பரிந்துரை செய்துள்ளார். தடை செய்யப்பட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்பான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பிடம் இருந்து நிதியுதவி பெற்றதாக குற்றம்சாட்டி, முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்ஐஏ விசாரணைக்கு டெல்லி துணை நிலை ஆளுநர் விகே சக்சேனா பரிந்துரைத்துள்ளார்.

அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி, தேவேந்திர பால் புல்லரை விடுதலை செய்வதற்காக காலிஸ்தான் ஆதரவு குழுவான 'சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ்' அமைப்பிடம் இருந்து 2014 - 2022 வரை ரூபாய் 134 கோடி பணம் பெற்றதாகவும், காலிஸ்தான் இயக்கத்துக்கு ஆதரவான உணர்வுகளை தூண்டுவதாகவும் அகில இந்து கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் அஷூ மோங்கியா அளித்த புகாரின் அடிப்படையில் சக்சேனா இந்த பரிந்துரையைச் செய்துள்ளார்.
'சீக்கியர்களுக்கான நீதி' அமைப்பிடம் இருந்து, அவர் நிதி பெற்றதாக உள்துறை அமைச்சகத்திற்கு உலக இந்து கூட்டமைப்பின் அஷூ மோங்கியா என்பவர் புகார் அளித்திருந்தார். அந்த புகாரின் பேரில், டெல்லி துணை நிலை ஆளுநர் சக்சேனா, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரை செய்துள்ளார். பதவியில் இருக்கும் முதலமைச்சர் ஒருவருக்கு எதிராக என்.ஐ.ஏ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தற்போது கடந்த ஒன்றரை மாதங்களாக சிறையில் இருந்து வருகிறார். முதல்வர் பதவியை ராஜினாமா செய்யாமல் சிறையில் இருந்தவாறே டெல்லி முதல்வராகப் பணியாற்றி வருகிறார் கெஜ்ரிவால்.
அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டது, 2024 மக்களவைத் தேர்தல் சமயத்தில் ஆளும் பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என ஆம் ஆத்மி கட்சியினர் விமர்சித்து வரும் நிலையில், தற்போது என்.ஐ.ஏ விசாரணைக்கு ஆளுநர் பரிந்துரை செய்திருப்பது அரசியல் வட்டாரத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications