கொரோனா: டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை- ஷாஹின் பாக் போராட்டத்துக்கு நெருக்கடி
டெல்லி: கொரோனா தாக்குதல் அச்சத்தால் டெல்லியில் 50 பேருக்கு மேல் ஒன்று கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஷாஹின் பாக் போராட்டக்காரர்களுக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
Recommended Video
கொரோனாவுக்கு இந்தியாவில் 2 பேர் பலியாகி உள்ளனர். இதனையடுத்து நாடு முழுவதும் கொரோனா தாக்குதலைத் தடுக்க தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது.

பொதுமக்களின் ஒன்றுகூடல் நிகழ்வுகளுக்கும் மார்ச் 31 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் அனைத்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. இதேபோல் டெல்லியிலும் ஏராளமான கட்டுப்பாடுகளும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
டெல்லியில் 50 பேருக்கும் அதிகமாக பொதுமக்கள் ஒன்றுகூடுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள அனைத்து நைட் கிளப்புகள், உடற்பயிற்சி கூடங்களும் மார்ச் 31 வரை மூடப்படும்.
இதனையடுத்து டெல்லி ஷாஹின் பாக்கில் 3 மாதங்களாக மத்திய அரசின் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் தொடருமா? என்ற கேள்விக்குறி எழுந்துள்ளது. ஆனால் போராட்டக்காரர்கள், தாங்கள் கொரோனா முன்னெச்சரிக்கையுடன் போராட்டத்தைத் தொடருவோம் என அறிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த முதல்வர் கெஜ்ரிவால், அனைவரும் அரசு பிறப்பித்துள்ள நடைமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications