Ilaiyaraja: என்னடா இது இளையராஜா-வுக்கு வந்த சோதனை.. 134 பட பாடல்களை பயன்படுத்த தடை!
டெல்லி: சரிகம நிறுவனத்திடம் இருக்கும் 134 பட பாடல்களை பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிம்ம வழங்கவோ கூடாது என இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
1976 ஆம் ஆண்டு முதல் 2001 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த 134 திரைப்படங்களின் பாடல்களின் இசை , ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் என சரிகம நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
அந்த திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து நிரந்தர காப்புரிமையை தங்கள் நிறுவனம் பெற்றுள்ளதாக சரிகம தெரிவித்துள்ளது.

ஆனால், இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் எனக் கூறி Amazon Music, iTunes, JioSaavn போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது. 1957-ஆம் ஆண்டு காப்புரிமைச் சட்டத்தின் பிரிவு 17(பி) படி, திரைப்படத்துக்காக உருவாக்கப்பட்ட இசை, பாடல் வரிகள் மற்றும் ஒலிப்பதிவுகளுக்கு திரைப்பட தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதை சரிகம தரப்பு வலியுறுத்தியது.
அந்த தயாரிப்பாளர்களிடமிருந்து சரிகம நிறுவனம் நிரந்தரமான, உலகளாவிய உரிமைகளை பெற்றிருப்பதாகவும் தெரிவித்தது. இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி துஷார் ராவ் கெடேலா, சரிகம நிறுவனத்திடம் உள்ள 134 பாடல்களை இளையராஜா உள்ளிட்ட எவரும் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ, மூன்றாம் தரப்பினருக்கு உரிமம் வழங்கவோ தடை விதித்தார்.
இத்தடை இல்லையெனில் சரிகம நிறுவனத்துக்கு ஈடுசெய்ய முடியாத பெரும் இழப்பு ஏற்படும் என நீதிபதி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற வழக்குகள் இளையராஜாவுக்கு புதிதல்ல. சமீபத்தில் 'என் இனிய பொன் நிலாவே' பாடல் தொடர்பான வழக்கிலும், 'நகுவ நயனா' பாடல் தொடர்பாகவும் டெல்லி உயர்நீதிமன்றம் சரிகமவின் உரிமையை உறுதிப்படுத்தி, இளையராஜாவின் உரிமம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது.
இதேபோல், பல திரைப்படங்களில் அவரது பழைய பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்குகளும் நடைபெற்று வருகின்றன. இந்த சம்பவங்கள் திரை இசை உரிமை தொடர்பான சட்ட விதிகளை மீண்டும் விவாதத்துக்கு உள்ளாக்கியுள்ளன. தற்போதைய இடைக்கால தடை தொடர்பாக இரு தரப்பும் அடுத்தக்கட்ட விசாரணைக்கு தயாராகி வருகின்றன.
-
இந்தியாவுக்கு கச்சா எண்ணெய் விநியோகம் செய்ய தயார்.. போர் பதற்றத்துக்கு மத்தியில் ரஷ்யா அறிவிப்பு! -
சவுதிக்கு விழுந்த அடி! ஹார்முஸ் ஜலசந்திக்கு பதில் செங்கடல்.. அடிமடியில் கைவைத்த ஈரானால் ரூட் மாற்றம் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? மானியம் வங்கி கணக்கிற்கு வராமல் போவது ஏன்? சமையலறையில் டிஜிட்டல் மர்மம் -
மீடியாவில் பேசாதீங்க.. தடுக்கப்படும் சங்கீதா.. விஜய் தரப்பில் 'மூவ்'? கோடிகளில் எகிறும் சமாதான தூது? -
தேனியில் ஓ பன்னீர்செல்வம் நினைத்தே பார்க்காதது.. கூண்டோடு விலகிய ஆதரவாளர்கள் எடுத்த முடிவு -
பயிர் கடன் ரத்து, உயர் கல்வி ஏற்பு .. விவசாயிகளுக்கான தவெக வாக்குறுதிகளை வெளியிட்ட விஜய் -
நெருப்பு வளையத்தில் இந்தியா! மோடி எடுத்த முடிவால்! போருக்குள் இழுக்க பார்க்கும் இஸ்ரேல்! கையை மீறுது -
ராஜ்யசபா எம்.பி ஆகும் 6 பேர் யார் யார்? திமுக, அதிமுக, தேமுதிக, பாமக இன்று அறிவிக்க திட்டம்! -
சிறகடிக்க ஆசை: விஜயாவிடம் நறுக்குன்னு ஸ்ருதி கேட்ட கேள்வி.. அண்ணாமலை எடுத்த முடிவு! மீனாவின் விபரீத செயல் -
5 ஸ்டார் ஹோட்டல் மாதிரி சில்லென்ற சொகுசு: சென்னை டூ நெல்லை ரயில் பயணிகளுக்கு ரூ.25ல் பெரிய சர்ப்ரைஸ் -
கருணாஸ் காட்டில் மழை தான்.. கடைக்கண் பார்வையை திருப்பிய ஸ்டாலின்! கண்டிப்பா அங்க தான் போட்டியாம்! -
ஈரானை பார்த்து நடுங்கிய டிரம்ப்! அவசரமாக இந்தியா கையில் எடுத்த வெட்டுக்கிளி ஆயுதம்! ரெடியான சேஷ்நாக்












Click it and Unblock the Notifications