உலகத் தலைவர்கள் ஒட்டுமொத்தமாக ஒன்று கூடும் ஜி20 மாநாடு.. டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் உஷார்!
டெல்லி: டெல்லியில் இரு நாட்கள் ஜி20 மாநாடு நடைபெறும் நிலையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லியில் ஜி 20 மாநாடு இன்றும் நாளையும் இரு நாட்கள் பாரத் மண்டபத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக உலகத் தலைவர்கள் எல்லாம் நேற்றைய தினம் டெல்லி வந்துவிட்டனர்.

உலகத் தலைவர்கள் ஒன்றும் கூடுவதால் டெல்லியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ஞாயிற்றுக்கிழமை இரவு 11.59 மணி வரை டெல்லியானது போலீஸாரின் கட்டுப்பாட்டில் இருக்கும். டெல்லி நேற்றைய தினம் முதல் 10 ஆம் தேதி வரை நகரில் பேருந்துகளை இயக்க கூடாது என டெல்லி போக்குவரத்து போலீஸார் தெரிவித்துவிட்டனர்.
உள்ளூர் போலீஸாரும் எல்லை பாதுகாப்பு படையினரும் டெல்லியின் ஷாதாரா மாவட்டத்தில் யமுனை ஆற்றில் படகுகள் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். வெள்ளிக்கிழமை காலை முதல் போலீஸார் மத்திய டெல்லி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்குச் செல்லும் வாகனங்களை தீவிர சோதனைக்குள்ளாகிய பிறகே அனுமதிக்கிறார்கள்.
டெல்லியில் உள்ள 5000 சிசிடிவி கேமராக்களை போலீஸார் கண்காணித்து வருகிறார்கள். மாவட்டங்கள் வாரியாக கட்டுப்பாட்டு அறைக்கு வீடியோக்கள் வருகின்றன. 24 மணி நேரமும் கண்காணிப்பில் இருக்கும் வகையில் இரு பாதுகாப்பு குழுவினர் ஷிப்ட் அடிப்படையில் பணியாற்றி வருகிறார்கள்.

வியாழக்கிழமை அதாவது நேற்று முன்தினம் இரவு முதலே அத்தியாவசிய பணிக்கு செல்லாத வாகனங்கள் நகர எல்லையிலிருந்து கிழக்கு மற்றும் மேற்கு பகுதியில் உள்ள நெடுஞ்சாலைகளுக்கு திருப்பி விடப்பட்டன. கனரக வாகனங்கள் , நடுத்தர கனரக வாகனங்கள், இலகுரக வாகனங்கள் ஆகியவை டெல்லிக்குள் நுழைய அனுமதி கிடையாது.
எனினும் அத்தியாவசிய பொருட்களான பால், காய்கறிகள், பழங்கள், மருந்து பொருட்களை ஏற்றி வரும் வாகனங்கள் உரிய அனுமதியுடன் உள்ளே வர அனுமதிக்கிறார்கள். டெல்லி முழுவதும் பாதுகாப்பு உஷார்படுத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பு குழுவின் நாய்கள் படையை சேர்ந்த ஜெனான், மிங், ஜோன், சோசோ மற்றும் ஜிங்கர் உள்ளிட்டவை வரவழைக்கப்பட்டுள்ளன.
அது போல் வெடிகுண்டு நிபுணர்களும் ராஜ்காட்டில் பாதுகாப்பை உறுதி செய்து வருகிறார்கள். 50 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளார்கள். அது போல் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாரேனும் இருந்தால் அவர்கள் குறித்து தகவலளிக்குமாறு குடிமக்களுக்கு போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
மத்திய டெல்லியில் உள்ள ராஜ்காட்டில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்திற்கு உலகத் தலைவர்கள் வருகை தரும் போது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக அங்குள்ள நாய்கள், குரங்குகளை அப்புறப்படுத்தும் பணிகளையும் மாவட்ட நிர்வாகத்தினருடன் இணைந்து போலீஸார் ஒருங்கிணைந்து செய்துள்ளனர்.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications