துப்பாக்கி சூட்டை கண்டித்து போராடிய ஜாமியா பல்கலை மாணவர்கள் கைது.. குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்
Recommended Video
டெல்லி: துப்பாக்கிச் சூட்டை கண்டித்து டெல்லி காவல் துறை தலைமையகம் அருகே போராட்டம் நடத்திய ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்களை போலீஸார் குண்டு கட்டாக தூக்கிச் சென்று கைது செய்தனர்.
டெல்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை கண்டித்து ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று மகாத்மா காந்தி சமாதி நோக்கி மாணவர்கள் பேரணி சென்றனர். அப்போது அங்கு மர்ம நபர் ஒருவர் நுழைந்தார்.

அவர் திடீரென மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து கொள்ளுங்கள் உங்கள் சுதந்திரத்தை என கூறியபடி வானத்தை நோக்கியும் மாணவர்களை நோக்கியும் சுட்டார். இதில் ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த ஷாதாப் என்ற மாணவரின் இடது கையில் தோட்டா பாய்ந்தது.
அவர் ஹோலி பேமிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். துப்பாக்கி சூடு நடத்திய கோபால் என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்படுகிறது. எனினும் அந்த நபர் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே போலீஸார் அவரை தடுக்காமல் வேடிக்கை பார்த்ததாகவும் உயிரை காத்து கொள்ள காயமடைந்த மாணவர் பேரிகார்டை தாண்டி போலீஸ் இருக்கும் பகுதிக்கு ஓடியதாகவும் மாணவர்கள் புகார் தெரிவித்தனர்.
#WATCH Delhi: Protesters who were sitting outside Police Headquarters(old) at ITO against the firing incident in Jamia area yesterday, detained by Police pic.twitter.com/UJCffpJKzN
— ANI (@ANI) January 31, 2020
இந்த நிலையில் துப்பாக்கிச் சூட்டுக்கு முன்பே நடவடிக்கை எடுக்காத போலீஸாரை கண்டித்து டெல்லியில் ஐடிஓஏ பகுதியில் உள்ள பழைய காவல் துறை தலைமையகத்துக்கு வெளியே நேற்று இரவு முதல் மாணவர்கள் போராட்டம் நடத்தினர்.
Delhi: Protesters who were sitting outside Police Headquarters(old) at ITO against the firing incident in Jamia area yesterday, detained by Police pic.twitter.com/n6D4rlr6yy
— ANI (@ANI) January 31, 2020
அப்போது போலீஸார் அவர்களை கைது செய்தனர். இதையடுத்து போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் மாணவர்களை போலீஸார் குண்டுகட்டாக தூக்கி சென்று வேனில் ஏற்றினர். இதனால் பரபரப்பு எழுந்தது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications