டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிட் பகிர்ந்த வழக்கு... பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் கைது!

Google Oneindia Tamil News

டெல்லி: டெல்லி போராட்டம் தொடர்பான டூல்கிட் பகிர்ந்த வழக்கில் பெண் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் திஷா ரவியை போலீசார் இன்று கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

Delhi protest toolkit case: Activist Disha Ravi arrested

மத்திய அரசின் வேளாண் சட்டத்தை கண்டித்து தலைநகர் டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். குடியரசு தினத்தில் நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையாக வெடித்தது. காலிஸ்தான் ஆதரவாளர்களால்தான் இந்த வன்முறை தூண்டப்பட்டதாக கூறும் டெல்லி போலீசார், இணையத்தில் குறிப்பாக ட்விட்டரில் உலவிய டூல்கிட்டைக் அதற்கு ஆதாரமாக கூறுகின்றனர்.

இந்த டூல்கிட்டை சூழலியல் ஆர்வலரான கிரேட்டா தன்பெர்க் தனது ட்விட்டரில் பகிர்ந்தார். அவர் மீதும் வழக்கு பதிவுசெய்யப்பட்டுள்ளது.இந்த நிலையில் இவ்வழக்கில் சம்பந்தப்பட்டதாகக் கூறி பெங்களூருவில் 21 வயதான திஷா ரவி என்பவரை டெல்லி போலீஸின் சைபர் பிரிவு இன்று கைது செய்துள்ளது. திஷா ரவி யும் சுற்றுச் சுழலியல் ஆர்வலர் ஆவார். 2018ஆம் ஆண்டு "Friday for Future" என்ற இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர்.

கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு போட்டுவிட்டு பின்னர் நீக்கிய உ.பி. போலீஸ்! கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை மீது அவசர கதியில் வழக்கு போட்டுவிட்டு பின்னர் நீக்கிய உ.பி. போலீஸ்!

ஸ்வீடன் நாடாளுமன்றத்தின் முன்பு பருவநிலை மாற்றத்திற்காக கிரேட்டா தன்பெர்க் போராட்டம் நடத்தியபோது இந்தியாவில் இந்த இயக்கம் உருவாகியது. கைது செய்யப்பட்ட திஷா ரவியை போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை 5 நாள் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

English summary
Police today arrested female environmental activist Disha Ravi in connection with a toolkit shared in connection with the Delhi protests
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X