Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புதிய தலைவலி! உச்சம் தொடும் டெங்கு.. 6 ஆண்டுகளில் இதுதான் மோசம்.. தலைநகரில் 5270 பேருக்கு பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்த மழைக்காலத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தலைநகர் டெல்லியில் கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5,270 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பே இன்னும் எந்த நாட்டிலும் முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. தீவிர கட்டுப்பாடுகள் மூலம் சில நாடுகள் மட்டுமே கொரோனா பாதிப்பை ஓரளவு கட்டுக்குள் வைத்துள்ளன.

இந்தியாவைப் பொறுத்தவரை 2ஆம் அலையில் உச்சம் தொட்ட கொரோனா அதன் பிறகு மெல்லக் குறைந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அனைவருக்கும் வேக்சின் செலுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு அரசு செயல்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் டெங்கு

அதிகரிக்கும் டெங்கு

இதனால் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியாவில் தொடர்ந்து கட்டுக்குள்ளே இருந்து வருகிறது. ஆனால் அதேநேரம் டெங்குவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வழக்கமாக மழைக் காலங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிக்கும் என்றாலும் கூட இந்த ஆண்டு அது மிக மோசமாக உள்ளதாக மருத்துவ வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

புதிய உச்சம்

புதிய உச்சம்

குறிப்பாகத் தலைநகர் டெல்லியில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு மிக மோசமான அளவுக்குப் பதிவாகியுள்ளது. இதுவரை டெல்லியில் 5270 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கடந்த 5 ஆண்டுகளில் உறுதி செய்யப்பட்ட டெங்கு பாதிப்புகளில் இது தான் மிக மிக அதிகமாகும். குறிப்பாகக் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 2570 பேருக்கு இந்த டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கவில்லை.

கடந்த 5 ஆண்டுகள்

கடந்த 5 ஆண்டுகள்

முன்னதாக கடந்த 2015இல் டெல்லியில் டெங்கு பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் சுமார் 10,600 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதியானது. தலைநகர் டெல்லியில் 1996ஆம் ஆண்டிற்குப் பிறகு பதிவு செய்யப்படும் மோசமான டெங்கு பாதிப்பு இதுவாகும். இருப்பினும், அடுத்து வந்த ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு டெல்லியில் கணிசமாகக் குறைந்தது. அதன் பிறகு ஒவ்வொரு ஆண்டும் டெங்கு பாதிப்பு குறைந்த வந்த நிலையில் இந்தாண்டு மீண்டும் அதிகரித்துள்ளது.

திடீர் அதிகரிப்பு

திடீர் அதிகரிப்பு

கடந்த 2016இல் 4431 பேருக்கும் 2017இல் 4726 பேருக்கு வைரஸ் பாதிப்பு குறைந்தது. அதைத் தொடர்ந்து 2018இல் 2798 பேருக்கு டெங்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இது 2019இல் 2036ஆகவும் 2020இல் 1072ஆகவும் குறைந்தது. இந்த ஆண்டு அக்டோபர் மாதம் மட்டும் 1196 பேருக்கு டெங்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், நவம்பரில் முதல் 13 நாட்களில் மட்டும் 3740 பேருக்கு டெங்கு உறுதியாகியுள்ளது. அதேபோல இந்த ஆண்டு டெங்குவால் டெல்லியில் மொத்தம் 9 பேர் உயிரிழந்தனர்.

எப்படி பரவுகிறது

எப்படி பரவுகிறது

டெங்கு காய்ச்சல் ஏடீஸ் வகை கொசுக்களினாலேயே பரவுகிறது. பொது இடங்களிலும், வீடுகளிலும் நீர் தேங்கி இருந்தால், அதில் இந்த கொசுக்கள் மிக எளிதாக இனப்பெருக்கம் செய்யும். இதனால் டெங்கு பாதிப்பு வேகமாகப் பரவும். இதன் காரணமாகவே நீர் தேங்காமல் இருக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் சுற்றுப்புறப் பகுதிகளைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் டெங்கு அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் உடனடியாக அருகிலுள்ள ஆரம்பச் சுகாதார மையத்திற்குச் செல்ல வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+