பள்ளி ஆசிரியை பலாத்காரம்- வீடியோ எடுத்து மிரட்டிய பிரின்சிபல் கைது

பள்ளி ஆசிரியைக்கு குளிர்பானத்தில் போதை மாத்திரை கலந்து கொடுத்து பலாத்காரம் செய்த பிரின்சிபல் அதை வீடியோ எடுத்து மிரட்டியுள்ளார். ஆசிரியை அளித்த புகாரின் பேரில் பிரின்சிபலை போலீசார் கைது செய்துள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கல்விக்கூடங்களும் இப்போது பாலியல் பலாத்கார கூடங்களாக மாறி வருகின்றன. மாணவிகளை சீரழிக்கும் ஆசிரியர்கள் பற்றிய செய்திகள் நாள்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. தெற்கு டெல்லியில் உள்ள பிரபல பள்ளியில் ஆசிரியை ஒருவரை பள்ளியின் முதல்வரே போதைக்கு அடிமையாக்கி பலாத்காரம் செய்துள்ளார். வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு தொடர்ச்சியாக சீரழித்த சம்பவம் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. போலிசில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் பிரின்சிபலை போலீசார் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அந்த பள்ளி ஆசிரியை கடந்த 2017ஆம் ஆண்டு ஜூன் மாதம் பிரின்சிபல் அறைக்கு போயுள்ளார். அப்போது ஸ்பெஷல் எடுப்பது பற்றி மீட்டிங் இருப்பதாக கூறி பேசியிருக்கிறார். அப்போது குளிர்பானத்தில் போதை மாத்திரையை கலந்து கொடுத்த அந்த பிரின்சிபல் மயக்க நிலையில் இருந்த ஆசிரியை பலாத்காரம் செய்து விட்டார்.

Delhi School Principal Allegedly Drugs molested Teacher On Campus

அதை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு ஆசிரியை அடிக்கடி மிரட்டியுள்ளார். தான் சொல்வதை கேட்காவிட்டால் அந்த வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு வைரலாக்கி விடுவதாகவும் மிரட்டியே பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் அந்த பிரின்சிபாலின் கொடுமை தாங்காத அந்த ஆசிரியை, போலீசில் புகார் அளித்துள்ளார்.

வழக்குப் பதிவு செய்த போலீசார், பிரின்சிபாலை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். வீடியோவை கைப்பற்றி அது இணையதளத்தில் வெளியிடாமல் தடுத்தனர். பிரபல பள்ளியின் ஆசிரியை ஒருவரை பள்ளி பிரின்சிபல் பலாத்காரம் செய்த சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+