இந்திய மக்கள்தொகையில் இன்னும் 98% மக்கள்.. கொரோனா ஆபத்தில் தான் உள்ளனர்.. மத்திய அரசு ரிப்போர்ட்
டெல்லி: இந்தியா மக்கள்தொகையில் 2%க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மீதமிருக்கும் 98% மக்கள் இன்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில்தான் உள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் தற்போது கொரோனா 2ஆம் அலை ஏற்பட்டுள்ளது. திங்கள்கிழமை மட்டும் இந்தியாவில் 2.63 லட்சம் பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டது. தற்போது வரை இந்தியாவில் 2.5 கோடி பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும், இந்தியா மக்கள்தொகையில் 2%க்கும் குறைவானவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மீதமிருக்கும் 98% மக்கள் இன்னும் வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில்தான் உள்ளனர் எனச் சுகாதார துறை இணை செயலாளர் லாவ் அகர்வால் தெரிவித்துள்ளார்
இது குறித்து மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் 1.8% மக்களுக்கு மட்டும் கொரோனா இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. மீதமிருப்பவர்களுக்கு கொரோனா ஏற்படும் ஆபத்து உள்ளது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த 15 நாட்களாகவே இந்தியாவில் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கடந்த மே 3ஆம் தேதி ஆக்டிவ் கேஸ்கள் 17.13%ஆக இருந்தது. இது இப்போது 13.3%ஆகக் குறைந்துள்ளது. எட்டு மாநிலங்களில் மட்டும் ஆக்டிவ் கேஸ்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக உள்ளது.
22 மாநிலங்களில் பாசிட்டிவ் விகிதம் 15%கீழ் குறைவாகவே உள்ளது. குறிப்பாக மகாராஷ்டிரா, உத்தரப் பிரதேசம், பீகார், செல்லி, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் வைரஸ் பாதிப்பு குறைந்துள்ளது இந்தியாவிலுள்ள 199 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பும் பாசிடிவ் விகிதமும் கடந்த 2 வாரங்களாகவே குறைந்து வருகிறது" என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications