பார்லிமென்டுக்கு போனோமா.. வந்தோமா என இல்லாமல் தருமபுரி எம்பி செய்த காரியத்தை பாருங்க மக்களே!
Recommended Video
டெல்லி: டெல்லியில் அரசுப் பள்ளிகளில் உள்ள நவீன கழிப்பறைகளை பார்வையிட அனுமதி கோரி தருமபுரி எம்பி செந்தில்குமார், டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவாலை சந்தித்து பேசினார்.
தருமபுரியில் கடந்த 2014-ஆம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியில் போட்டியிட்டு எம்பியானவர் அன்புமணி ராமதாஸ். இவர் கடந்த 5 ஆண்டுகளில் தருமபுரி மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்து அதே தொகுதியில் அன்புமணி போட்டியிட்டார். வாக்கு எண்ணிக்கையின் ஆரம்பத்தில் முன்னிலை வகித்து வந்த அன்புமணி போக போக பின்னுக்கு தள்ளப்பட்டார். இவரை எதிர்த்து திமுக சார்பில் செந்தில்குமார் போட்டியிட்டார்.

ஆக்கப்பூர்வம்
இதையடுத்து இரவு வரை இருவரும் மாறி மாறி முன்னணியில் இருப்பதும் பின்னுக்கு செல்வதுமாக இருந்தனர். இதே நிலை நீண்ட நேரம் நீடித்த நிலையில் செந்தில்குமார் வெற்றி பெற்றார். இவர் ஆரம்பத்திலிருந்து ஆக்கப்பூர்வமான செயல்களை செய்து வருகிறார்.

எம்பியாக தேர்வு
முதல்முறையாக எம்பியாக தேர்வு செய்யப்பட்டுள்ளது குறித்து உங்களை பார்வைகளையும் கருத்துகளையும் தன்னுடன் பகிர்ந்து கொள்ளுமாறு செந்தில்குமார் தருமபுரி அழைப்பு விடுத்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கு அவர் வைத்த பெயர் #Coffee_with_twitter_friends என பெயரிட்டிருந்தார்.

கட்சி பேதமின்றி
இதையடுத்து தருமபுரி லோக்சபா எம்பியாக செந்தில் குமார் தேர்வு செய்யப்பட்ட நிலையில் அதிமுக ராஜ்யசபா எம்பியாக தருமபுரியை சேர்ந்த சந்திரசேகரும் மற்றொரு எம்பியாக அதிமுக கூட்டணி சார்பில் பாமக அன்புமணியும் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனால் தருமபுரி மக்களுக்கு 3 எம்பிக்கள் கிடைத்தது மகிழ்ச்சி என்றும் மூவரும் இணைந்து பணியாற்றி தருமபுரியில் வேலைவாய்ப்பின்மையையும், தண்ணீர் பிரச்சினையையும் ஒழிப்போம் என கட்சி பேதமின்றி செந்தில்குமார் அழைப்பு விடுத்துள்ளார்.

மக்களவை உறுப்பினர்
அதுபோல் டெல்லியில் இயங்கும் நவீன பள்ளிகளின் கட்டமைப்புகளை தனது சொந்த தொகுதியில் அமைப்பது தொடர்பாக ஆலோசனைகளை பெற டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை தருமபுரி தொகுதி மக்களவை உறுப்பினர் டாக்டர் செந்தில் இன்று சந்தித்தார்.
|
செந்தில்குமாருக்கு சபாஷ்
தேர்தலில் வெற்றி பெற்றோமா, டெல்லிக்கு அடிக்கடி ஃபிளைட்டில் விசிட் அடித்தோமா, மாதமானால் சம்பளம் வாங்கினோமா என சில எம்பிக்களை போல் இல்லாமல் உண்மையில் தன்னை தேர்வு செய்த மக்களுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் என முனைப்புடன் செயல்படும் செந்தில் குமாருக்கு சபாஷ் போடுங்கள் மக்களே.
-
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே? -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
வருமான வரி படிவம் வெளியீடு.. மாத சம்பளம் வாங்குவோர், சிறு வணிகர்கள்.. அறிய வேண்டியவை












Click it and Unblock the Notifications