"ஓவர்.. ஓவர்”.. சிக்கலை தீர்த்து வைத்த அமித் ஷா.. எடப்பாடி பேச்சை கவனிச்சீங்களா? இனி அவரும் சைலண்ட்?
டெல்லி : அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அமித் ஷா, நட்டா ஆகியோரை டெல்லியில் சந்தித்தபோது அண்ணாமலையும் உடன் இருந்தார். கடந்த சில வாரங்களாக அண்ணாமலை - அதிமுக இடையே கருத்து மோதல்கள் நிகழ்ந்து வந்த நிலையில், எடப்பாடி பழனிசாமி, அண்ணாமலை இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களை வழங்கி சமரசம் செய்து வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிமுகவின் பொதுச் செயலாளரான பிறகு அமித் ஷாவை முதல்முறையாக நேற்று இரவு சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. டெல்லியில் நடைபெற்ற இந்த சந்திப்பில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார், கேபி முனுசாமி ஆகியோர் உடனிருந்தனர். இந்தச் சந்திப்பின்போது தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையும் இடம்பெற்றிருந்தார்.

அதிமுக - பாஜக இடையே கடந்த சில வாரங்களாக கருத்து மோதல்கள் தொடர்ந்து வந்த நிலையில், அதிமுக தலைவர்கள் - அண்ணாமலை - அமித் ஷா - நட்டா என டெல்லியில் நடந்த இந்தச் சந்திப்பு பெரியளவில் கவனம் பெற்றுள்ளது. இந்தச் சந்திப்பின்போது, அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி தரப்பை அமித் ஷா சமரசம் செய்து வைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தகித்த அதிமுக பாஜக : தமிழ்நாட்டில் தனித்துப் போட்டியிட வேண்டும், அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியையே ராஜினாமா செய்வேன் என பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் அதிரடியாக பேசியிருந்தார் அண்ணாமலை. ஆனால் எடப்பாடி பழனிசாமி, கூட்டணியை பாஜக தலைமையே முடிவு செய்யும் என்றார். அதற்கேற்ப அமித் ஷாவும், அதிமுக கூட்டணியில் இருப்பதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அண்ணாமலை அப்போதும் விடாமல் அரசியலில் எதுவும் கல்லில் எழுதப்பட்டவை அல்ல எனச் சீறியிருந்தார். அதற்கு எடப்பாடி பழனிசாமி, அதிமுக-பாஜக கூட்டணி தொடர்கிறது என்பதை தெளிவாகச் சொல்லிவிட்டோம். கூட்டணியை நிர்ணயம் செய்யக் கூடியவர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். மேலே பாஸ் இருக்கும் போது கீழே இருப்பவர்கள் குறித்து எதற்குப் பேச்சு என சீண்டலாகவே சொனனார் எடப்பாடி பழனிசாமி.
டெல்லியில் மீட்டிங் : இந்நிலையில் தான், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்க, குஷியானது எடப்பாடி தரப்பு. கர்நாடகா சட்டசபை தேர்தலில் தாக்கல் செய்த வேட்பு மனுவைக் கூட பாஜக கேட்டுக்கொண்டதுமே வாபஸ் பெற்றது அதிமுக. இந்நிலையில் அமித் ஷாவை சந்திக்க எடப்பாடி பழனிசாமி நேரம் கேட்டதும், டெல்லியும் பச்சைக்கொடி காட்டியது.
அதன்படி நேற்று தனது சகாக்களோடு டெல்லிக்குச் சென்றார் எடப்பாடி பழனிசாமி. அங்கு அமித் ஷா, நட்டா ஆகியோரை சந்தித்துப் பேசினார். இந்தச் சந்திப்பின் போது பாஜக மாநில தலைவர் அண்ணாமலையும் இருந்தது தான் ஹைலைட். கர்நாடகா தேர்தல் வேலைகளில் பிஸியாக இருந்த அண்ணாமலையை, எடப்பாடி மீட்டிங்கிற்காகவே அழைத்தாராம் அமித் ஷா.
எடப்பாடி சொன்ன வார்த்தை : இந்த சந்திப்பின் போது, தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணியை குழப்பமில்லாமல் செயல்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நாம் பிரிந்திருந்தால் எதிரிகளுக்கு வெற்றி எளிதாகிவிடும், பொது எதிரியான திமுகவை ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என அமித்ஷாவிடம் எடப்பாடி பழனிசாமி கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பாஜக - அதிமுக இடையே நிகழ்ந்து வரும் மோதல் போக்கு குறித்து விவாதித்து அண்ணாமலை- எடப்பாடி பழனிசாமி இடையேயான பிரச்சனைகளை அமித் ஷா - நட்டா ஆகியோர் சமரசம் செய்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இருவருக்கும் அமித் ஷா சில அறிவுறுத்தல்களையும் வழங்கியுள்ளாராம்.
உடனே இணக்கம் : இதனை உறுதி செய்யும் விதமாக சந்திப்பு நடந்த சிறிது நேரங்களிலேயே அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில், "தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர், பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுகவின் தலைவர்கள், நமது பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை டெல்லியில் சந்தித்தனர்" என புகைப்படங்களைப் பகிர்ந்தார்.
அதேபோல, எடப்பாடி பழனிசாமியும் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தபோது, அதிமுக - பாஜக கூட்டணி தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது என்றும், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையுடன் எந்த தகராறும் இல்லை, திட்டமிட்டு அதிமுக - பாஜகவை பிரிக்க நினைக்கிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
-
"திமுக தோற்கணும்னு ராகுல் காந்தியே ஆசைப்படுறாரு".. கொளுத்திப் போடும் அண்ணாமலை! -
“அண்ணாமலையை நீக்கினால்தான் பாஜகவுடன் கூட்டணி என எடப்பாடி சொன்னார்”.. போட்டு உடைத்த செங்கோட்டையன் -
கோவை திமுகவை அழிக்க செந்தில் பாலாஜி ஸ்கெட்ச்.. அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு -
லட்டு மாதிரி கிடைத்த வாய்ப்பு.. கையில் இருந்த தங்கத்தை மிஸ் பண்ணிட்டாரே.. எடப்பாடி பழனிசாமி! -
தமிழ்நாட்டில் எம்.பி சீட் 39-லிருந்து 59 ஆக உயரும்.. எண்ணிக்கை குறையாது.. - அண்ணாமலை சொன்ன தகவல் -
"எங்க ஏரியாவுக்கு வா"! சுந்தர் சி முன்பே "ஸ்டைல் பாண்டி" டயலாக் சொன்ன எடப்பாடி! குலுங்கிய மதுரை! -
ஜெயலலிதா இருந்தவரை வாலை சுருட்டி இருந்தாங்க.. நான் இருந்திருந்தால்.. கண் சிவந்த சசிகலா -
தலைவரை ஓரங்கட்டியவர்களுக்கு எதுக்கு வாக்கு! அண்ணாமலை ஆர்மி உள்ளடி வேலை! புலனாய்வில் இறங்கிய கமலாலயம் -
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றப்படும், 3 சிலிண்டர்கள் இலவசம்.. தேர்தல் அறிக்கையை வெளியிட்ட பாஜக! -
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்!












Click it and Unblock the Notifications