மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: அண்ணாமலை பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சி தொடங்குவார் என்ற யூகங்கள் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு அவர் மீண்டும் தமிழக பாஜக தலைவராக தொடர்வதற்கான முன்னோட்டமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

தமிழக அரசியலில் கடந்த சில நாட்களாகவே அண்ணாமலையின் பெயர் தான் ஓங்கி ஒலித்துக் கொண்டிருக்கிறது. புதுக்கட்சி தொடங்கப் போவதாக தகவல் வெளியானதில் இருந்தே அண்ணாமலையின் ஆதரவாளர்கள் கொண்டாடி வருகின்றனர். மறுபக்கம் பாஜக டெல்லி தலைமை அண்ணாமலைக்கு எதாவது பதவி கொடுத்து பாஜகவில் நீடிக்க செய்யவே விரும்புவதாக கூறப்படுகிறது.

Annamalai Meet PM Modi Speculation Grows Over His Return as Tamil Nadu BJP Chief

மோடியை சந்தித்த அண்ணாமலை?

கடந்த சில நாட்களுக்கு முன்பு அண்ணாமலை டெல்லி சென்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்து அதற்கான விலகல் கடிதத்தையும் கொடுத்தார். ஆனால் அதற்கு பாஜக தலைமை சம்மதிக்காமல் அண்ணாமலையை சமரசம் செய்ததாக கூறப்படுகிறது. ஆனாலும் அவர் விரைவில் தனிக்கட்சி தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

இந்த நிலையில் அண்ணாமலை பிரதமர் மோடியை இன்று சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளன. அண்ணாமலை சமாதானம் ஆகவில்லை.. நாளை அல்லது நாளை மறுநாள் செய்தியாளர்களை சந்தித்து புதுக்கட்சி பற்றிய அறிவிப்பை வெளியிடுவார் என்று அரசியல் வட்டாரத்தில் யூகங்கள் கொடி கட்டி பறக்கும் நிலையில் மோடியை சந்தித்து இருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது..

மீண்டும் தமிழக பாஜக தலைவரா?

பிரதமர் மோடியை சந்தித்தன் மூலம் அண்ணாமலை சமாதனம் ஆகிவிட்டாரா? மீண்டும் பாஜக தலைவராக நியமிக்கப்பட உள்ளரா? அல்லது மோடியை சந்தித்து வாழ்த்து பெற்று விட்டு தன்னால் பாஜகவில் தொடரமுடியாத சூழலை விளக்கினாரா? என்று தெரியவில்லை. அண்ணமலையை சுற்றி கடந்த சில நாட்களாக வந்து கொண்டிருக்கும் பரபரப்புக்கு நாளை விடை தெரிந்துவிடும் என்றே அவரது ஆதரவாளர்கள் மத்தியில் சொல்லப்படுகிறது.

லண்டன் பயணத்தை முடித்துவிட்டுத் திரும்பிய அண்ணாமலை, அடுத்ததாக என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழுந்தது. அப்போதில் இருந்தே பெரிய அளவில் அரசியல் விமர்சனங்கள் எதுவும் வைக்காமல் அமைதியாகவே இருந்தார். புது கட்சி அல்லது இயக்கம் ஆரம்பிக்க போவதாகவும் தகவல் பரவி வந்தது. இது பாஜக மேலிடத்திற்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தமிழகத்தில் பாஜகவை ஒரு முக்கிய சக்தியாக மாற்றிய அண்ணாமலை வெளியேறுவது கட்சிக்குப் பின்னடைவாக அமையும் என டெல்லி தலைமை கருதுகிறது.

மோடியின் தலையீடு?

இப்போது அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுவதாக கடிதம் கொடுத்து இருப்பதனால் தான் பிரதமர் மோடி நேரடியாகத் தலையிட்டுள்ளதாகத் தெரிகிறது. எனவே பிறந்தநாளான இன்று அண்ணாமலையை அழைத்து அவரிடம் மோடி ஆலோசனை நடத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது. அண்ணாமலையின் வேகமும், தமிழக இளைஞர்கள் மத்தியில் அவருக்கு இருக்கும் செல்வாக்கும் பாஜகவிற்குத் தேவை என்பதை மோடி உணர்ந்துள்ளார்.

இதன் காரணமாக, அண்ணாமலையை பாஜகவிலேயே தக்கவைத்துக் கொள்ள டெல்லி தலைமை முடிவு செய்துள்ளது. அண்ணாமலை கேட்டுக் கொண்டபடி, தமிழக பாஜகவில் சில அதிரடி மாற்றங்களைச் செய்யவும், அவருக்கு முழு சுதந்திரம் வழங்கவும் மோடி பச்சைக்கொடி காட்டியுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் மீண்டும் அண்ணாமலையே தமிழக பாஜக தலைவராக நீடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அண்ணாமலை மீண்டும் தலைவராக வேண்டும் என்பதே பாஜகவின் அடிமட்டத் தொண்டர்களின் விருப்பமாக உள்ளது. சமூக வலைதளங்களில் அண்ணாமலைக்கு ஆதரவாகப் பெரிய அளவில் பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மோடி - அண்ணாமலை சந்திப்புக்குப் பிறகு தொண்டர்கள் மத்தியில் ஒரு புதிய உற்சாகம் பிறந்துள்ளது. டெல்லி தலைமை எடுக்கப்போகும் அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காகத் தமிழக பாஜகவினர் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

நான் புதிய கட்சித் தொடங்கப் போகிறேன். பாஜகவில் இருந்து விலகிவிட்டதாக அண்ணாமலை இதுவரை அதிகாரப்பூர்வமாக சொல்லவில்லை. தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை ராஜினாமா செய்ததற்கான கடிதம் எதுவும் தரவில்லை என்று கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+