பாலியல் வன்புணர்வு வழக்கில்.. நான் கூறியது.. தவறாக புரிந்து கொள்ளப்பட்டது.. தலைமை நீதிபதி விளக்கம்
டெல்லி: கடந்த வாரம் பாலியல் வன்புணர்வு வழக்கில் தான் கூறிய கருத்து தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டதாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி மகாராஷ்டிராவைச் சேர்ந்த அரசு ஊழியர் ஒருவர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ பாப்டே தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அந்த நபர் பள்ளி மாணவி ஒருவரை பாலியல் வன்புணர்வு செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணையில், பாதிக்கப்பட்ட மாணவியை திருமணம் செய்து கொள்வதாக இருந்தால் கோரிக்கையைப் பரிசீலனை செய்வதாக நீதிபதி எஸ்.ஏ பாப்டே தெரிவித்தார். தலைமை நீதிபதியின் இந்தக் கருத்து நாடு முழுவதும் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியின் இந்தக் கருத்திற்கு பல்வேறு மகளிர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும், நீதிபதி பாப்டே உடனடியாக தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். இது தொடர்பான 5,000க்கும் மேற்பட்டோர் கையெழுத்திட்ட மனுவும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்நிலையில் இது தொடர்பாக தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே விளக்கம் அளித்துள்ளார். இந்த விமர்சனங்களை நியமற்றது என தெரிவித்த அவர், தான் கூறிய கருத்துகள் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
குற்றம் சாட்டப்பட்டவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனக் கூறவில்லை என்றும் பாதிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்யப் போகிறீர்களா என்று கேள்வியையே எழுப்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், பெண்கள் மீது மிக உயர்ந்த மதிப்பைக் கொண்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
-
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன் -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம்












Click it and Unblock the Notifications