எழுந்தது சர்ச்சை.. காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் ஓட்டு போடவில்லை
Subscribe to Oneindia Tamil
டெல்லி: காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் திக் விஜய்சிங் ஓட்டு போடாதது புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
59 தொகுதிகளுக்கு நேற்றைய தினம் 6-ஆம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்றது. இதில் பிரபலங்கள், வாக்காளர்கள் என வாக்களித்தனர். இந்த நிலையில் இந்த தேர்தலில் திக் விஜய் சிங் ஓட்டு போடாதது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதை அவரே ஒப்புக் கொண்டு வருத்தம் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான திக் விஜய் சிங் மத்திய பிரதேச மாநிலம் போபால் தொகுதியில் போட்டியிடுகிறார்.
வழக்கமாக தனது சொந்த தொகுதியான ராஜ்காரில் வாக்களிப்பது வழக்கம். ஆனால் போபாலில் நேற்று அவர் வாக்குப் பதிவை பார்வையிட வேண்டியிருந்தது.
இதனால் அவரால் 300 கி.மீ தூரத்தில் உள்ள ராஜ்காருக்கு ஓட்டு போட செல்ல முடியவில்லை. இது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications