‛‛ஆபாச படம்’’ உள்ளிட்ட வலைதளங்களுக்கு கடிவாளம்.. வருகிறது டிஜிட்டல் இந்தியா மசோதா.. ஏன் முக்கியம்?
டெல்லி: 11 முக்கிய அம்சங்களுடன் டிஜிட்டல் இந்தியா மசோதாவை மத்திய அரசு கொண்டு வர தீவிரம் காட்டி வருகிறது. அடுத்ததாக நடைபெற உள்ள நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட இருக்கிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு புதிய மசோதாக்களை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி வருகிறது. இந்தியாவில் கொண்டு வர வேண்டிய மாற்றம் மற்றும் சட்ட திருத்தம் தொடர்பாக ஒவ்வொரு நாடாளுமன்ற கூட்டத்தொடரிலும் மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தான் புதிதாக ‛டிஜிட்டல் இந்தியா மசோதா' கொண்டு வர மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 மற்றும் அச்சட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்திய தகவல் தொழில்நுட்பம் சார்ந்த விஷயங்கள் கையாளப்பட்டு வருகின்றன. தகவல் தொழில்நுட்பத்தில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளதை கருத்தில் கொண்டு அதற்கேற்ப, ஒருங்கிணைந்த புதிய சட்டமாக டிஜிட்டல் இந்தியா சட்டத்தைக் கொண்டு வர மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதற்கிடையே தான் அந்த மசோதா பற்றி மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறையின் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: டிஜிட்டல் இந்தியா மசோதா தயாரிக்கப்பட்டு வருகிறது. டிஜிட்டல் இந்தியா மசோதா குறித்த ஆலோசனைகள் குறித்த இந்த மாதம் தொடங்கும். இந்த மசோதா வரும் குளிர்காலக் கூட்டத் தொடரில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம்.
2014ம் ஆண்டில் இந்தியாவில் டிஜிட்டல் முறைக்கு மாறவில்லை. ஆனால் இப்போது நாட்டில் 85 கோடி பேர் இணையதளம் பயன்படுத்தி வருகின்றனர். உலகின் மிகப்பெரிய இணையதள பயன்பாடு கொண்ட நாடாக நாம் மாறியுள்ளோம். 2025ல் இந்த எண்ணிக்கை 120 கோடியாக உயரும். மேலும் தற்போதைய சூழலில் ஒவ்வொரு இணையதளமும் மிகவும் பாதுகாப்பாகவும், நம்பகத்தன்மையுடனும் செயல்பட வேண்டுமு். இது அந்தந்த இணையதளங்களில் பொறுப்பாகும். இதற்காக டிஜிட்டல் இந்தியா மசோதாவில் ஒரு விதி சேர்க்கப்படும், இது இந்த தளங்களின் பயனர்களின் பாதுகாப்பையும் நம்பிக்கையையும் நிலைநிறுத்துவது தொடர்பானதாகும்.
மேலும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட பிறகு அதற்கான சட்டத்தை இந்த ஆண்டே நடைமுறைக்குக் கொண்டு வரவும் அரசு திட்டமிட்டுள்ளது. இந்தியாவில் இணையதளங்களை ஒழுங்குப்படுத்தவும், சைபர் குற்றங்களை எதிர்த்து போராடும் வகையிலும் இந்த மசோதா இருக்கும். இந்த மசோதாவின் முக்கிய அம்சமாக 11 விஷயங்கள் உள்ளன. குழந்தைகள் பாலியல் துன்புறுத்தல், மதவெறுப்பை தூண்டுதல், காப்புரிமை மீறல், சமூக வலைதளங்களில் தவறான தகவல்கள் பரப்பப்படுவது உள்ளிட்ட 11 விஷயங்களை தடுக்க முக்கிய பங்காற்றும்'' என்றார்.
இந்த மசோதா என்பது 11 விஷயங்களை மையப்படுத்தி இருப்பதாக ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். அதன்படி அந்த 11 முக்கிய அம்சங்களின் விபரங்கள் வெளியாகி உள்ளன. அதாவது இணையதளங்களில் ஆபாச படங்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்புணர்வு, குழந்தைகளுக்கு தீங்கு ஏற்படுத்தும் வகையிலான பதிவுகளை கண்காணித்து நடவடிக்கை எடுப்பது. காப்புரிமை மீறல், உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புதல், ஆள்மாறாட்டம், இந்தியாவின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுக்கு எதிரான சாராம்சம், கம்ப்யூட்டர் மால்வேர், தடை செய்யப்பட்ட ஆன்லைன் விளையாட்டுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க உதவும்.
இந்த சாராம்சங்கள் தகவல் தொழில்நுட்பத்தின் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் குறியீடு) விதிகள் 2021ன் கடைசி திருத்தத்தில் பட்டியலிடப்பட்டு இருக்கின்றன. இருப்பினும் கூட இந்த டிஜிட்டல் இந்தியா மசோதா என்பது மேற்கூறிய விஷயங்களால் ஏற்படும் பிரச்சனைகளை சம்பந்தப்பட்ட இணையதளம் அல்லது அதற்கான பிளாட்பார்ம்களை பொறுப்பேற்கும்படி மத்திய அரசுக்கு சாதகமாக சட்டத்தில் இடம் அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
-
அதிகாலையில் வந்த அறிவிப்பு! மோடியே சொன்னாலும்.. குறையாத பெட்ரோல், டீசல் விலை! -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை அதிரடியாக குறைத்த மத்திய அரசு! விலை குறையுமா? விவரம் -
90% பேருக்கு தெரியாது.. கலர் கலராக இருக்கும் ரயில்கள்.. ஒவ்வொன்றுக்கும் என்ன அர்த்தம் தெரியுமா!












Click it and Unblock the Notifications