இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க டி.ஆர் .பாலு வலியுறுத்தல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று லோக்சபாவில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.
லோக்சபாவில் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை இன்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தாக்கல் செய்தார். இம்மசோதாவை தொடக்க நிலையிலேயே காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கடுமையாக எதிர்த்தார்.

அரசியல் சாசனத்தின் முகப்புரைக்கே இந்த மசோதா எதிரானது; சிறுபான்மையினரை குறிவைத்தே இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது என விமர்சித்தார்.
அப்போது குறுக்கிட்டுப் பேசிய திமுக எம்.பி. டி.ஆர் பாலு, இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க குடியுரிமை சட்ட திருத்த மசோதா மறுப்பதாக குற்றம் சாட்டினார். மேலும் இந்தியாவில் வாழும் இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்றும் டி.ஆர். பாலு வலியுறுத்தினார்.












Click it and Unblock the Notifications