Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வரதட்சணை சட்டம்.. பொய்ப்புகார் கொடுக்கும் பெண்கள்..வழக்கு போட்டவருக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ருப்ஷி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில் வரதட்சணை தடுப்பு சட்டத்தை தவறாக பயன்படுத்தி பொய்ப்புகார் கொடுக்கும் பெண்களிடம் இருந்து ஆண்களை பாதுகாக்க வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், நீங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று, இந்த பிரச்சினைகளை எழுப்புங்கள் என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.

திருமணத்தின் போது பெண் வீட்டாரிடம் இருந்து மணமகன் வீட்டார் கேட்டுப் பெறும் பணம், நகை, சொத்து போன்றவற்றை கேட்டுப்பெறுவது பல்வேறு சமூகங்களில் இன்றும் வழக்கமாக உள்ளது. என்ன தான் வரதட்சணை தடுப்பு சட்டங்கள் செயல்பாட்டில் இருந்தாலும், இத்தனை பவுன் தங்கம், வீட்டிற்கு தேவையான பாத்திரங்கள், வீடு, வாகனம் என ஏதாவது வரதட்சணை கேட்பது நடக்கிறது. அதேநேரம் பெண் வீட்டில் நகை, பணம், பாத்திரங்கள் உள்ளிட்ட சீர் செய்கிறார்கள் என்றாலும், கட்டாயப்படுத்தி கேட்பது அடிக்கடி நடக்கிறது.

supreme court dowry marriage

மாமியார் மருமகள் சண்டைகளுக்கு வரதட்சணை முக்கிய காரணமாக இருக்கிறது. வரதட்சணைக்கு எதிராக சட்டங்கள் நடைமுறையில் இருக்கிறது. இந்த சட்டம் பெண்களுக்கு பாதுகாப்பு தருவதற்காக உருவாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் பொய்யான புகார் அளித்து கணவன் மற்றும் கணவன் குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பெண்களுக்கும் இந்த வரதட்சனை தடுப்பு சட்டம் உள்ளதாக பரவலாகவே குற்றச்சாட்டு உள்ளது. இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு எந்த நிவாரணமும் கிடைக்காத நிலையே இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

இந்நிலையில் ருப்ஷி சிங் என்பவர் உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், "1961-ம் ஆண்டின் வரதட்சணை தடுப்பு சட்டம், 2005-ம் ஆண்டின் குடும்ப வன்முறையில் இருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் ஆகியவை பெண்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்காக கொண்டுவரப்பட்ட சட்டங்களாக உள்ளன. ஆனால் அதே சட்டங்களை தவறாக பயன்படுத்தி, பெண்கள் பொய்ப்புகார் கொடுக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்களின் அராஜகத்தால் பாதிக்கப்படும் ஆண்களை பாதுகாக்க வேண்டும்.

மேலும், மேற்கண்ட சட்டங்களில் உள்ள உட்பிரிவுகள், ஆண்களுக்கு எதிராக தீய எண்ணம் கொண்டவையாகவும், நியாயமற்றவையாகவும் உள்ளன. குறிப்பாக, வரதட்சணை தடுப்பு சட்டத்தின் 2 மற்றும் 3-வது பிரிவுகள் ஆண்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி வருகின்றன.அதேபோல் வரதட்சணை தடுப்பு சட்டம், மத அடிப்படையில் ஆண்களுக்கு பாரபட்சமாக உள்ளது. ஆகவே, இந்த சட்டங்களை செல்லாது என்று அறிவிக்க வேண்டும்" இவ்வாறு ருப்ஷி சிங் மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு, உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் பி.ஆர்.கவாய், வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரரின் வழக்கறிஞரை பார்த்து, ''நீங்கள் நாடாளுமன்றத்துக்கு சென்று, இந்த பிரச்சினைகளை எழுப்புங்கள்'' என்று கூறி, மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+