ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு.. பட்டாசு வெடித்து பாஜகவினர் கொண்டாட்டம்.. தமிழகத்திலும் உற்சாகம்!
டெல்லி: இந்திய ஜனாதிபதியாக திரெளபதி முர்முவின் வெற்றியை தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் பாஜகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
இந்திய ஜனாதிபதியாக ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ம் நிறைவு அடைகிறது. இதனால் புதிய ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் கடந்த 18ம் தேதி நடந்தது.
இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் சார்பில் யஷ்வந்த் சின்ஹா போட்டியிட்டார். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் திரெளபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

99.18 சதவீத ஓட்டுக்கள் பதிவு
இவர்கள் 2 பேரும் வேட்புமனுத்தாக்கல் செய்து ஒவ்வொரு மாநிலமாக சென்று கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோரினர். இந்நிலையில் தான் கடந்த 18 ம் தேதி நாடு முழுவதும் ஜனாதிபதி தேர்தல் விறுவிறுப்பாக நடந்தது. நாடாளுமன்றம், ஒவ்வொரு மாநிலங்களின் சட்டசபைகளில் எம்பி, எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். காலை 10 மணிக்கு துவங்கிய ஓட்டுப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. இந்த தேர்தலில் மொத்தம் 4,033 எம்எல்ஏக்கள், 776 எம்பிக்கள் என மொத்தம் 4809 பேர் வாக்கு செலுத்த தகுதியாக இருந்தனர். மொத்தம் 99.18 சதவீத ஓட்டுக்கள் பதிவாகின. இதையடுத்து ஓட்டுச்சீட்டுகள் அடங்கிய வாக்குப்பெட்டிகள் விமானம் மூலம் டெல்லி எடுத்து செல்லப்பட்டன.

திரெளபதி முர்மு முன்னிலை
இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு டெல்லி நாடாளுமன்றத்தில் ஓட்டுக்கள் எண்ணப்பட்டன. இதில் துவக்கம் முதலே பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்மு தான் முன்னிலையில் இருந்தார். இன்று இரவு 8 மணிக்கு 3வது சுற்று ஓட்டு எண்ணிக்கை வெளியானது. இதிலும் யஷ்வந்த் சின்ஹா பின்தங்கினார்.

ஜனாதிபதியாகும் திரெளபதி முர்மு
இதில் மொத்த வாக்குகளில் 50 சதவீதத்தை திரெளபதி முர்மு கடந்தார். அவர் 2161 வாக்குகள் பெற்றார். எதிர்க்கட்சிகளின் வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவுக்கு 1058 வாக்குகள் கிடைத்திருந்தன. இதன்மூலம் திரௌபதி முர்மு பெற்ற வாக்குகளின் மதிப்பு 5,77,777 ஆகவும், யஷ்வந்த் சின்ஹா பெற்ற வாக்குகள் மதிப்பு 2,61,062 ஆகவும் இருந்தது. இதன்மூலம் திரெளபதி முர்முவின் வெற்றி உறுதியாகி உள்ளது. இதன்மூலம் இந்தியாவின் அடுத்த ஜனாதிபதியாக திரெளபதி முர்மு பொறுப்பேற்க உள்ளார்.

துவங்கிய கொண்டாட்டம்
இந்நிலையில் தான் திரெளபதி முர்முவின் வெற்றியை பாஜகவினர் கொண்டாட துவங்கி உள்ளனர். டெல்லியில் பாஜக சார்பில் மேள,தாளங்கள் முழங்க நடனக்கலைஞர்களுடன் திரெளபதி முர்முவின் கொண்டாட்டத்தை துவங்கி உள்ளனர். மேலும் இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இதேபோல் நாட்டின் பல்வேறு இடங்களிலும் லட்டுகள், வேறு விதமான இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம் களைகட்டியுள்ளது.

தமிழகத்திலும் கொண்டாட்டம்
தமிழகத்திலும் ஜனாதிபதி தேர்தலில் திரெளபதி முர்முவின் வெற்றியை கொண்டாடினர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் பாஜகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் ஜெயராமன் முன்னாள் தலைவர் சிவா, தனகோடி, மகளிர் அணி பொது செயலாளர் அமுதா, மற்றும் மாவட்ட மகளிர் அணி துணை தலைவி முருகம்மாள், சங்கர், ஆகியோர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications