முதல் சுற்றிலேயே பெரும் வித்தியாசம்... குடியரசுத் தலைவர் தேர்தலில் திரௌபதி முர்மு முன்னிலை
டெல்லி: குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணியின் வேட்பாளராக போட்டியிட்ட திரௌபதி முர்மு முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் முன்னிலை வகித்து வருகிறார்.
இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் நிறைவடைகிறது.
இதனை தொடர்ந்து கடந்த ஜூலை 18 ஆம் தேதி நாட்டின் 15 வது குடியரசுத் தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெற்றது.

வேட்பாளர்கள்
எதிர்க்கட்சிகளின் தரப்பில் முன்னாள் மத்திய அமைச்சரும் திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவருமான யஷ்வந்த் சின்ஹா குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு இருந்தார். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரௌபதி முர்மு வேட்பாளராக அறிவிக்கப்பட்டு தேர்தலில் போட்டியிட்டார்.

விறுவிறுப்பான வாக்குப்பதிவு
குடியரசுத் தலைவர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு வாக்குச்சீட்டு முறைப்படி விறுவிறுப்பாக நடைபெற்றது. அந்தந்த மாநில சட்டப்பேரவையில் முதலமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தினர். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் நாடாளுமன்றத்தில் தங்கள் வாக்கை பதிவு செய்தனர். இதில் 99.18% சதவீத வாக்குகள் பதிவாகின.

வாக்கு எண்ணிக்கை
இதனை தொடர்ந்து இன்று வாக்கு சீட்டில் பதிவு செய்யப்பட்ட வாக்குகளின் எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தில் இதற்கான ஆயத்தப்பணிகள் தொடங்கின. சுமார் ஒருமணியளவில் பெட்டிகள் திறக்கப்பட்டு வாக்குகள் பலத்த பாதுகாப்புடன் எண்ணப்பட்டு வருகின்றன.
Recommended Video

திரௌபதி முர்மு முன்னிலை
முதலில் எம்.பிக்களின் வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது முதல் சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகி இருக்கும் நிலையில் திரௌபதி முர்மு 3,78,000 மதிப்பு கொண்ட 540 வாக்குகளை பெற்று முன்னிலை வகித்து வருகிறார். எதிர்க்கட்சி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹா, 1,45,600 மதிப்பு கொண்ட 208 வாக்குகளை பெற்று உள்ளார். 15 வாக்குகள் செல்லாதது என்று தேர்தல் அதிகாரி பி.சி.மோடி தெரிவித்து உள்ளார்.












Click it and Unblock the Notifications