ஹரியானாவில் மிதமான நிலநடுக்கம்- ரிக்டரில் 3.1 ஆக பதிவு- அதிர்ந்தது டெல்லி- வீதிகளில் மக்கள் தஞ்சம்!
டெல்லி: டெல்லியில் இன்று நிலநடுக்கத்தால் ஏற்பட்ட அதிர்வுகள் பொதுமக்களை பெரும் அச்சமடைய வைத்தது. இதனால் வீடுகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்தனர்.
அண்மையில் ஆப்கானில் மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நிலநடுக்கங்களில் 8,000 பேர் வரை பலியாகி உள்ளனர். ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைகளை மையமாக வைத்து நிலநடுக்கம் ஏற்படும் போதும் நேபாளத்தில் நிலநடுக்கம் ஏற்படும் போதும் பாகிஸ்தான், இந்தியாவிலும் கடும் நில அதிர்வுகள் உணரப்படுகின்றன.

தற்போது ஹரியானாவின் பரிதாபாத்தை மையமாக வைத்து நிலத்தடியில் 10 அடிக்கு கீழே நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டரில் 3.1 அலகுகளாகப் பதிவானது. இதனால் டெல்லி உள்ளிட்ட பகுதிகளில் நில அதிர்வுகள் கடுமையாக உணரப்பட்டது.
தலைநகர் டெல்லியில் வீடுகள், அலுவலகங்கள், வர்த்தக நிறுவனங்களை விட்டு பொதுமக்கள் அச்சத்தில் வெளியே ஓடிவந்து வீதிகளில் தஞ்சமடைந்தனர். இதனால் டெல்லியில் பதற்றம் நிலவுகிறது.
#BREAKING: #earthquakes tremors felt in Delhi.
— Md Husnain (@mdrj007) October 15, 2023
Details awaited. #earthquake #Delhi #DelhiHalfMarathon #DelhiEarthquake #DelhiNCR #भूकंप #Tremors #ENGvsAFG #UttarPradesh #Haryana #Noida #INDvsPAK pic.twitter.com/uyyFjDbQ6G












Click it and Unblock the Notifications