தமிழகத்தில் தற்போது இடைத்தேர்தல் இல்லை... மற்ற மாநிலங்களில் 56 தொகுதிகளுக்கு தேர்தல்!
டெல்லி: தமிழகத்தில் காலியாக இருக்கும் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தற்போது இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆனால், மற்ற மாநிலங்களில் காலியாக இருக்கும் மொத்தம் 56 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கிறது.
தேர்தல் நடத்துவதில் தற்போது சிக்கல் இருப்பதாக பல்வேறு மாநில தலைமைச் செயலாளர்கள் மற்றும் தலைமை தேர்தல் ஆணையரிடம் இருந்து மத்திய தலைமை தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

லோக்சபா
தமிழகம் மட்டுமின்றி, அசாம், கேரளா, மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களிலும் காலியாக இருக்கும் சட்டசபை மற்றும் லோக் சபா தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தப் போவதில்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

ஜெ.அன்பழகன்
திமுக எம்எல்ஏக்களாக இருந்த கே.பி.பி.சாமி, காத்தவராயன், ஜெ.அன்பழகன் ஆகியோரின் மறைவால் திருவொற்றியூர், குடியாத்தம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி ஆகிய 3 சட்டசபை தொகுதிகள் காலியாக உள்ளன.

குடியாத்தம்
ஒரு தொகுதி காலியானால் மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி, 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தலை நடத்த வேண்டும். இதன்படி, திருவொற்றியூர், குடியாத்தம் தொகுதிகளில் ஆகஸ்ட் இறுதிக்குள் தேர்தல் நடத்தி இருக்க வேண்டும். சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதிக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.

செப்டம்பர்
இதுகுறித்து கடந்த ஜூலை மாத இறுதியில் தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ கூறுகையில், ''தமிழகத்தில் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை இடைத்தேர்தல்களை நடத்த வாய்ப்பில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் திருவொற்றியூர், குடியாத்தம் ஆகிய 2 தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்வது போன்ற பணிகள் தொடங்கிவிட்டன. செப்டம்பர் 7ஆம் தேதிக்குப் பின்னர் எப்போது தேர்தல் தேதியை அறிவித்தாலும் நடத்த தயாராக இருக்கிறோம்'' என்று தெரிவித்து இருந்தார்.

மத்தியப்பிரதேசம்
அதேசமயம் மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கு, குஜராத்தில் 8 தொகுதிகளுக்கு, உத்தரப்பிரதேசத்தில் 7 தொகுதிகளுக்கு, ஜார்கண்ட், நாகலாந்து, கர்நாடகா, மணிப்பூர், நாகலாந்து, ஒடிஸா ஆகிய மாநிலங்களில் தலா இரண்டு தொகுதிகளிலும் நவம்பர் 3ஆம் தேதி இடைத் தேர்தல் நடக்கிறது. முடிவுகள் பீகார் தேர்தல் முடிவுகளுடன் சேர்த்து நவம்பர் 10ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
தமிழ்நாடு முழுவதும்.. மூடப்படும் பெட்ரோல் பங்குகள்! சட்டம் ஒழுங்கு பிரச்சனையால்.. விஜய்க்கு சிக்கல்! -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சட்டமன்றத்தில் டீலிங்.. மாண்பை உடைத்த விஜய்! கொந்தளிக்கும் எதிர்க்கட்சிகள்! -
தமிழ்நாட்டில் டெண்டர் மற்றும் கட்டிட அனுமதிகளில் ரூல்ஸ் அடியோடு மாறுகிறது.. அரசு அதிரடி உத்தரவு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
Rich CM Vijay: நாட்டின் பணக்கார முதல்வர்கள் பட்டியல்! தமிழக முதல்வர் விஜய்க்கு எத்தனையாவது இடம்? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications