உலகப் போர்களை விடவும் மோசமான பாதிப்பை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.. பிரதமர் மோடி ஆதங்கம்
டெல்லி: கொரோனா வைரஸ் பாதிப்பு இரண்டாவது உலகப் போரை விடவும் மோசமாக அதிக மக்களை பாதித்துள்ளது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
Recommended Video
கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாக இன்று இரவு 8 மணிக்கு நாட்டு மக்கள் மத்தியில் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறுகையில், உலகம் முழுக்க மனிதகுலம் மீது கொரோனா வைரஸ் தாக்குதல் நடத்தி வருகிறது.

கடந்த இரண்டு மாதங்களாக பெரும் கவலையோடு உலகம் முழுக்க இது பரவி வருவதை நாம் பார்த்து வருகிறோம். உலகம் தற்போது மிகப்பெரிய சிக்கலை கடந்து கொண்டு இருக்கிறது. முதலாம் உலகப் போர், இரண்டாம் உலகப் போரை விடவும் அதிகப்படியான நாடுகள் இந்த வைரஸால் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.
ஒரு வைரஸ் காரணமாக இத்தனை நாடுகள் பாதிக்கப்படுவது என்பது முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகமாக இருக்கிறது. ஒவ்வொரு இந்தியனும் விழிப்புணர்வோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது. எப்போதெல்லாம் இயற்கை பேரிடர் வருகிறதோ, அப்போதெல்லாம் ஒரு குறிப்பிட்ட நாடுகளுக்கு மட்டும்தான் அது பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் ஒட்டுமொத்த மனித குலத்தின் மீது வைரஸ் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
130 கோடி பேரும் கொரோனாவுக்கு எதிரான போரை முன்னெடுக்க வர வேண்டும். சோசியல் டிஸ்டன்ஸ் என்கிற சமூக இடைவெளியை நாம் கடைபிடிக்க வேண்டியது கட்டாயம். இவ்வாறு அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications