பிஎஸ்எஃப் காவலர் பணியிடங்களில்.. அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு 50% ஆக உயர்வு!
டெல்லி: இந்திய துணை ராணுவப் படையான எல்லை பாதுகாப்புப் படையில் (BSF), காவலர் பணிக்கான முன்னாள் அக்னி வீரர்களுக்கான இடஒதுக்கீடு 10 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பு மூலம் இந்த முக்கிய மாற்றம் அமலுக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நேற்றிரவு வெளியானது.

"எல்லை பாதுகாப்புப் படை, பொதுப் பணிப் பிரிவு (பத்திரிகை சாராத) ஆட்சேர்ப்பு விதிகள், 2015-ல் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் மூலம் 50% இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது. முன்னாள் அக்னி வீரர்கள் உடல் தகுதித் தேர்வு மற்றும் உடல் திறன் தேர்வுகள் அனைத்திலிருந்தும் விலக்கு பெறுவார்கள்" என மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பில் தளர்வுகள் அளிக்கப்பட்டதும் முன்னாள் அக்னி வீரர்களுக்குக் கிடைக்கும் மற்றொரு முக்கியமான சலுகையாகும். அதன்படி, அக்னி வீரர் திட்டத்தின் முதல் தொகுதிக்கு 5 ஆண்டுகள் வரையிலும், மற்ற முன்னாள் அக்னி வீரர்களுக்கு 3 ஆண்டுகள் வரையிலும் அதிகபட்ச வயது வரம்பு தளர்வு வழங்கப்படும். இது பலருக்குப் பயன்தரும் என்று சொல்லப்படுகிறது.
இந்த நேரடி ஆட்சேர்ப்பு முறையில், ஒவ்வொரு ஆண்டும் நிரப்பப்படும் காலிப்பணியிடங்களில் 50 சதவீதம் முன்னாள் அக்னி வீரர்களுக்கும், 10 சதவீதம் முன்னாள் படைவீரர்களுக்கும் ஒதுக்கப்படும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், போரிடும் பிரிவின் காவலர் (Tradesmen) பணியிடங்களில் ஆண்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு 3 சதவீதம் வரை ஒதுக்கீடு வழங்கப்படும், என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆட்சேர்ப்பு 2 கட்டங்களாக நடைபெறும். முதல் கட்டத்தில், அக்னி வீரர்களுக்கு ஒதுக்கப்பட்ட 50 சதவீத காலிப்பணியிடங்களுக்கு நோடல் படை மூலம் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். இரண்டாவது கட்டத்தில், முன்னாள் அக்னி வீரர்கள் அல்லாத மற்ற விண்ணப்பதாரர்களுக்கான மீதமுள்ள 47 சதவீத காலிப்பணியிடங்களுக்கு (10% முன்னாள் படை வீரர்கள் உட்பட) பணியாளர் தேர்வு ஆணையத்தால் ஆட்சேர்ப்பு நடத்தப்படும். முதல் கட்டத்தில் நிரப்பப்படாத அக்னி வீரர் இடங்களும் இதில் சேர்க்கப்படும்.
அக்னி வீரர் என்பவர்கள் யார்?
இந்திய ஆயுதப்படையில் ஒப்பந்த அடிப்படையிலான பணிகள் கொண்டுவரப்பட்டன. அதாவது ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படையில் இந்த ஒப்பந்த பணிகள் கொண்டுவரப்பட்டன. அதன்படி, புதியதாக பணியில் சேர்பவர்கள் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவார்கள். இவர்கள் நிரந்தர பணியாளர்கள் அல்ல. 4 ஆண்டுகள் வரை ஒப்பந்தத்தில் வேலை செய்வார்கள். இவர்களுக்கு, முதல் 6 மாதம் பயிற்சி வழங்கப்படும்.
4 ஆண்டுகள் பணி நிறைவடைந்ததும், வெறும் 25% அக்னி வீரர்கள் மட்டும் பணிக்கு எடுத்துக்கொள்ளப்படுவார்கள். மற்ற 75% வீரர்கள் பணியில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். இப்படி வெளியே வரும் வீரர்களுக்குதான் தற்போது வேலை அறிவிக்கப்பட்டிருக்கிறது.
-
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
நோட் பண்ணுங்க! கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கு 'செக்' - ரேஷன் கார்டில் இதை கவனிக்கலைன்னா பணம் கட்? -
கழுத்தறுத்த பாஜக..சரண்டராகும் சரத்குமார்! பஞ்சாயத்தை கூட்டிய நாட்டாமை குடும்பத்தார்! பரபர பாலிடிக்ஸ் -
பென்டகன் பிளான் ரெடி.. ஈரானுக்குள் நுழையும் அமெரிக்க வீரர்கள்! கதை மொத்தமா முடியுது! -
Siragadikka Aasai Promo: விஜயாவுக்கு எதிராக ஆதாரத்தை கண்டுபிடித்த முத்து- மீனா.. சிந்தாமணிக்கு ஆப்பு! செம சம்பவம் -
பாஜக நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இருந்து தமிழிசை பெயர் நீக்கம்.. பின்னணி இதுதானா? -
தப்புக் கணக்கான ராதிகாவின் முடிவு? மீண்டும் சமத்துவ மக்கள் கட்சியை தொடங்குகிறாரா சரத்குமார்? -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
நன்றியய்யா நன்றி.. ஓட்டல் ஓனர்கள் வயிற்றில் பால் வார்த்த அறிவிப்பு! இனி சிலிண்டர் தட்டுப்பாடு இல்லை! -
துபாய் உட்பட.. மொத்த வளைகுடா நாடுகளிலும் குடிநீர் பஞ்சம் ஏற்படும் அபாயம்! ஈரான் எச்சரிக்கை!












Click it and Unblock the Notifications