Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்மோகன் சிங்கிற்கு முழு ராணுவ மரியாதையுடன் நாளை காலை 11.45க்கு இறுதி சடங்கு.. மத்திய அரசு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நாளை (சனிக்கிழமை ) காலை 11.45 மணிக்கு டெல்லி நிகாம் போத் காட்டில் தகனம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி ஊர்வலம் மற்றும் தகனத்தின் போது இராணுவ மரியாதைக்கான ஏற்பாடுகளை செய்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பொருளாதாரத்தை வலுவாக மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நாலை காலை 11:45 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

manmohan singh delhi

80களில் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், 90களில் இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டைமைத்ததில் முக்கிய பங்குவகித்துள்ளார். 1991ல் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாராளமாயத்திற்கு இந்திய சந்தைகயை திறந்துவிட்டார். இவரது புரட்சிகரமான முடிவால் தான் இந்தியாவில் இன்று ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வந்துள்ளன. இந்தியாவின் பொருளதாரம் வலிமையாக இருப்பதற்கு மன்மோகன் சிங் முக்கிய காரணம் என்று போற்றப்படுகிறார். பாஜக உள்பட எல்லா கட்சிகளுமே மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை வலிமையாக்க பாடுபட்டார் என்பதை பதிவு செய்துள்ளன-

manmohan singh delhi

இந்நிலையில் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.

மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92 ஆகும்.

இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்தது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல். துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து ஏழு நாள் துக்கம் அணுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மன்மோகன் சிங் உடல் நாலை காலை 11. 45 மணிக்கு முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+