மன்மோகன் சிங்கிற்கு முழு ராணுவ மரியாதையுடன் நாளை காலை 11.45க்கு இறுதி சடங்கு.. மத்திய அரசு
டெல்லி: மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் உடல் முழு ராணுவ மரியாதையுடன் நாளை (சனிக்கிழமை ) காலை 11.45 மணிக்கு டெல்லி நிகாம் போத் காட்டில் தகனம் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. "முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு இறுதி ஊர்வலம் மற்றும் தகனத்தின் போது இராணுவ மரியாதைக்கான ஏற்பாடுகளை செய்ய பாதுகாப்பு அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பொருளாதாரத்தை வலுவாக மாற்றுவதற்கு முக்கிய பங்காற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு விஐபிக்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் நாலை காலை 11:45 மணிக்கு இறுதி அஞ்சலி செலுத்த உள்ளார்கள்.

80களில் ரிசர்வ் வங்கியின் கவர்னராகவும், 90களில் இந்தியாவின் நிதியமைச்சராகவும் இருந்தவர் டாக்டர் மன்மோகன் சிங். இவர் கடந்த 2004-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை 10 ஆண்டுகள் இந்தியாவின் பிரதமராக பதவி வகித்தார். மன்மோகன் சிங், இந்தியாவின் பொருளாதாரத்தை கட்டைமைத்ததில் முக்கிய பங்குவகித்துள்ளார். 1991ல் பலத்த எதிர்ப்புக்கு மத்தியில் தாராளமாயத்திற்கு இந்திய சந்தைகயை திறந்துவிட்டார். இவரது புரட்சிகரமான முடிவால் தான் இந்தியாவில் இன்று ஏராளமான நிறுவனங்கள், தொழிற்சாலைகள் வந்துள்ளன. இந்தியாவின் பொருளதாரம் வலிமையாக இருப்பதற்கு மன்மோகன் சிங் முக்கிய காரணம் என்று போற்றப்படுகிறார். பாஜக உள்பட எல்லா கட்சிகளுமே மன்மோகன் சிங் இந்திய பொருளாதாரத்தை வலிமையாக்க பாடுபட்டார் என்பதை பதிவு செய்துள்ளன-

இந்நிலையில் மன்மோகன் சிங் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரை நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். அதன் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகி வீட்டில் ஓய்வெடுத்து வந்தார். ஏற்கனவே இருமுறை இருதய அறுவை சிகிச்சை செய்து இருந்த மன்மோகன் சிங், வயோதிகம் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு அவ்வப்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று இரவு வீட்டில் இருந்த அவருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மயங்கிய நிலையில் இருந்த அவரை அவரது குடும்பத்தினர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங்கிற்கு டாக்டர்கள் குழுவினர் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் சிகிச்சை பலன் இன்றி நேற்று இரவு 9.51 மணிக்கு மன்மோகன் சிங் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 92 ஆகும்.
இந்நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மரணம் அடைந்த தகவல் அறிந்தது குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இரங்கல். துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி , எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் ஸ்டாலின், பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். பல்வேறு மாநில முதல்வர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவை அடுத்து ஏழு நாள் துக்கம் அணுசரிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அரசு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் மன்மோகன் சிங் உடல் நாலை காலை 11. 45 மணிக்கு முழு ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை?












Click it and Unblock the Notifications