மக்களவை தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் 200க்கும் மேற்பட்ட தொகுதிளில் பாஜக முன்னிலை
Recommended Video
டெல்லி: ஜனநாயகத்தின் மிகப்பெரிய திருவிழாவின் உச்சகட்ட காட்சிகள் இன்று அரங்கேறி வரும் நிலையில், நாடு முழுவதும் சுமார் 200-க்கும் மேற்பட்ட தொகுதிகளில், பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் மொத்தமுள்ள 543 மக்களவை தொகுதிகளில், வேலூரில் மட்டும் பணப்பட்டுவாடா புகாரால் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. மீதமுள்ள 542 மக்களவை தொகுதிகளுக்கும் 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று முடிந்தது.

543 தொகுதிகளில் சுமார் 437 தொகுதிகளில் பாரதிய ஜனதா போட்டியிட்டுள்ளது. அதே போல காங்கிரஸ் கட்சி 421 மக்களவை தொகுதிகளில் களம் கண்டுள்ளது.
கடந்த ஞாயிற்று கிழமையன்று வெளியிடப்பட்ட எக்ஸிட் போல் முடிவுகளில், பாரதிய ஜனதா கூட்டணிக்கு சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கம் என்று கூறப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு 120 முதல் 150 இடங்கள் வரையே கிடைக்கும் என கருத்து கணிப்பு முடிவுகள் வெளியாகின.
இந்நிலையில் தற்போது வாக்கு எண்ணிக்கை துவங்கி நடைபெற்று வரும் நிலையில், நாடு முழுவதும் பாரதிய ஜனதா கூட்டணி சுமார் 210-க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காங்கிரஸ் கூட்டணி 90-க்கும் மேற்பட்ட இடங்களில் மட்டுமே தற்போது வரை முன்னிலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் காங்கிரஸ் தொண்டர்கள் உற்சாகமிழந்து காணப்படுகின்றனர்
எக்ஸிட் போல் முடிவுகளின் படி தான் தேர்தல் முடிவுகள் அமைய போகிறதா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
-
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications