தீவிரமடையும் விவசாயிகள் போராட்டம்.. டெல்லி- ஹரியானாவை இணைக்கும் எல்லைகள் மூடல்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகளின் போராட்டம் தீவிரமடையும் நிலையில் டெல்லியையும் ஹரியானாவையும் இணைக்கும் டிக்ரி, சிங்கு எல்லைகள் இன்றைய தினம் மூடப்பட்டுள்ளன.

நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் வேளாண் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. இவை விவசாயிகளுக்கு எதிரானது என கூறி விவசாயிகளும் எதிர்க்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Farmers protest: Delhi borders remain shut and traffic diverted

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் விவசாயிகள் டெல்லி எல்லையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். லட்சக்கணக்கான விவசாயிகள் எல்லையில் குவிந்து தொடர்ந்து போராடி வருகிறார்கள்.

போராடுவது தவறு என உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டிய நிலையிலும் வேளாண் சட்டங்களை முற்றிலும் ரத்து செய்தால் மட்டுமே போராட்டத்தை திரும்ப பெறுவோம் என விவசாயிகள் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டார்கள்.

இந்த நிலையில் தலைநகர் டெல்லியையும் ஹரியானாவையும் இணைக்கும் சிங்கு, டிக்ரி, ஆச்சண்டி, பியூ மன்யாரி, சாபோலி, மங்கேஷ் ஆகிய சாலைகளில் இரு வழி போக்குவரத்து இன்றைய தினம் மூடப்பட்டன.

இதனால் டெல்லியிலிருந்து ஹரியானா பயணம் செய்யும் வாகன ஓட்டிகள் லம்பூர் சாஃபியாபாத், பல்லா, சிங்கு பள்ளி டோல் வரி எல்லை வழியாகவோ அல்லது குருகிராம், ஃபரிதாபாத் வழியாகவோ செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+